
இலங்கை உட்பட உலகின் பல்வேறு முனைகளுக்கு சென்று செய்தி சேகரித்த உலகின் புகழ்பெற்ற போர் முனை நிபுணர்களில் ஒருவரான அமெரிக்கா பெண்மணி மேரின் கொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி சர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் மேற்குலக சக்திகளை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மேரிகொல்வினின் இறப்பு ஊடகத்திற்கு பெரிய இழப்பு 20.02.2012 அன்று நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இவர் தன்னுடன் ஒரு போட்டோ இதழியரை அழைத்து சென்று விட்டார். என்பது மறக்கமுடியதாதது. இவரின் இழப்பிற்கு பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது ஊடகவியலாளர்கள் பலர் அஞ்சலி செலுத்தியதை நாம் காணத்தவறவில்லை.
இலங்கை பற்றி அவரது பார்வை அதிகமாகவே இருந்தது. இலங்கை மக்களுக்கு தனது இரண்டு கண்களையும் இழந்தும் தனது போராட்டத்தை நிறுத்தாமல் தழிழீழ விடுதலைப்புலிகளின் தகவல்களை மேற்குலக நாடுகளில் சமர்ப்பித்தவர். இலங்கை மக்கள் ஒரு தீர்வைப்பெறவேண்டும். இடைக்கால யுத்தத்த்pல் தீர்வு கொண்டு வரப்பட வேண்டும். நான் எல்லாப்பிரச்சனைகளையும் துணிவுடன் கொண்டு வருவேன் என தனது கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் புகழ் பெற்ற வெளிநாட்டு செய்தியாளர் மேரிகொல்வின் இவர் பிறந்தது அமெரிக்கவில் லண்டனில் வசித்து வந்து ஊடகத்துடன்; தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
வன்முறையை விட பேனா முனை கூரானது என்பது மேரிகொல்வினின் கருத்து நண்பர் யார் ? எதிரி யார்? என தெரியாமல் மேரிகொல்வின் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டார். இந்தப்பாரிய இழப்புக்கும் தோல்விக்கும் வன்முறையே காரணம் என இந்த விடயத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஓரே கருத்தை தெரிவிக்கின்றனர். ஊடகவியலாளரின் பேனா முனை ஒர் அயுதமா? என்ற கேள்விக்குறி-----------------