Monday, May 28, 2012

அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறும் முகாம் மக்கள்

இலங்கை இந்தியன் நாடுகளை பிரிக்கும் எல்லைக்கோடான இயற்கைவளம் நிறைந்த காங்கேசன்தறை பகுதியை அண்மித்துள்ள இடங்களான தையிட்டி, மயிலிட்டி, குரும்பசிட்டி ஆகிய இடங்களை சொந்த இடமாக கொண்ட மக்கள்  1990ம் ஆண்டு வடக்கில் ஏற்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது பிரதேசங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள். மீன்பிடிப்பு, தச்சுத்தொழில், கால்நடைவளர்ப்பு என வாழ்வதாரத்தொழில்களின் மூலம் தமது வாழ்வதாரத்தை தன்னிறைவாக கொண்டிருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் போரின் போதுஅழிக்கமுடியாத சொத்துகளையும், சொந்தங்களையும் விட்டு இடம்பெயர்ந்து வன்னி, வவுனியா என பல பகுதிகளுக்கு சென்று இறுதியாக மல்லாகம் நீதவான் முகாமில் தஞ்சமடைந்து 22 வருடங்களாக அகதி வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார்கள். அன்று ஆரம்பித்த அகதி முகாம் வாழ்க்கை பல துன்பங்கள், நெருக்கடிகள் என்பவற்றை சந்தித்த வண்ணமும் தமது பிரதேசங்களில் தாம் செய்த வாழ்வதாரத்தொழில்களை இன்று வரையும் செய்து வருகின்றனர்.
அகதி வாழ்வை யாரும் விரும்பமாட்டர்கள் தமது சொந்த மண்ணுக்கு எப்போது மீள்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் காங்கேசன் துறையை அண்டிய பிரதேசங்களான தையிட்டி, மயிலிட்டி, குரும்பசிட்டி, ஊரணி போன்ற பகுதி மக்களும் இடம்பெயர்ந்த பிற்பாடு அவர்களுடைய வாழ்வில் இருள்சுழ்ந்துள்ளது. அடிக்கடி இந்த பிரதேங்களில் யுத்தம் நிகழ்ந்த படியால் மக்களின் சொத்துகள் அளவுக்கதிகாக திருடப்பட்டு சொந்த மண்ணை விட்டு விரட்டப்பட்டு வன்னி பிரதேசங்களுக்கு ஓடிச்சென்று அங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டதை விட கொடூரமாக பசி, பட்டினி என வாடினார்கள் அங்கு அகதி முகாம் அமைத்துக்கொடுக்கப்படாமையால் இருப்பிடங்களாக சிலர் சொந்தங்களின் வீடுகளிலும், சிலர் வீதிகளிலும் வாழ்ந்தார்கள் அதன் பின்னர் தான் வடக்கின் ஒரு சில பகுதி மக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையில் விடப்பட்டனர். இந்த மக்களும் தமது சொந்த மண்ணை பார்க்கலாம் என்று வந்துள்ளார்கள் ஆனால் அவர்களின் இடங்கள் விடப்படாத நிலையில் இருந்தமையால் அவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர்.  புபபபபபபபபப நறுவனத்தால் மல்லாகத்தில் நீதவான் முகாம்கள் போடப்பட்டு வாழத்தொடங்கினார்கள்.
இடம்பெயர்ந்த அகதிமுகாம் வாழ்கைக்கு 22 வருடங்களாகியும் அந்த மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாதநிலை என்று கூறாம். நல்ல முறையில் குடிதண்ணீர்வசதிகள், மலசலகூடவசதிகள் சரியாக பெற்றுத்தரப்படவில்லைஎன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை நிரந்தரமகா தரப்பட்ட வளம் என்றால் வசிப்பதற்கு ஒரு இடமும், 1 இலட்சம் பெறுமதியான இந்த வீட்டுத்திட்டமும் தான். எமது குழந்தைகள் பாடசாலை செல்வதற்கு ஆரம்பத்தில் உதவிகள் செய்தார்கள் அதன் பின்னர் எந்த உதவிகளும் செய்வதில்லை ஆரம்பத்தில் னு, சு, ஊ யுனிசென், னு, சு, ஊ ஆகிய நிறுவனஙகள் உதவிகளை வழங்கிய போது கொஞ்சம் பொருளதார கஸ்ரங்கள் இல்லாமல் இருந்தது. எங்களுக்கு சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை குழந்தைகள் பசிதாங்க மாட்டர்கள் அவர்களுக்காக நாங்கள் கஸ்ரப்படுகிறோம் எமக்கு எனியும் பொருட்கள் தரும்படி கேட்கவில்லை யுத்தம் நடந்த எல்லாப்பிரதேசங்களையும் மீள்குடியேற்றத்திற்கு விடப்பட்டுள்ளார்கள் எங்களையும் எமது சொந்த இடத்திற்கு விடும்படி தான் நாங்கள் இப்போது கேட்டக்கொள்கின்றொhம். என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றார்.
குறித்த நீதவான் முகாமில் 65 வீடுகளுடன் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் வேறு இடங்களுக்கும் சென்று வாழ்ந்து வருகின்றார்கள். அந்த மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளாக குடிதண்ணீர்பிரச்சனையும், மலசலகூடவசதி இன்மை பிரச்சனையே. மலசலகூடவசதி போதியளவுக்கு இருப்பினும் சகித்துக்கொள்வோம். குடிதண்ணிர் பிரச்சனையை சகித்துகொள்ளமுடியாது இவர்கள் அமைத்துக்கொடுத்த தண்ணீர் குழாயில் வருகின்ற தண்ணீரை எடுத்தக்குடித்தால் நோய்கள் தான்வருகிறது. ( சொறி, சிரங்கு, வாந்திபேதி) அதனால் எமது முகாமை அண்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் எடுத்து வருகிறோhம். என்ன செய்வது நாம் அகதி மக்கள் தானே அனுபவித்து தான் ஆகவேண்டும் என மக்கள் அங்கலாய்க்கின்றார்கள். பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொரு நேரங்களிலும் குடிதண்ணீர் போத்தல்களிலும், கான்களிலும், குடங்களிலும் எடுத்துச்செல்லும் காடசியை நாமும் பர்த்திருக்க தவறவில்லை.
முகாம் வாழ்கையை விட எமது மண்ணில் சிறு குடிசை போட்டு வாழ்ந்தாலும் நிம்மதியுடன் வாழாலாம். ஓவ்வொரு நாட்களும் எப்படி போகக்கூடும் என்று உள்ளம் ஏங்கிக்கொண்டிருக்கிறது. குடும்பத்தை பார்ப்பதற்கு வேலைக்கு போகவேண்டும் ஆனால் எமது தொழில் மீன்பிடித்தொழில் மழை, காற்று என்றால் கடலுக்கு போகமுடியாது அதனால் மிகவும் கஸ்ரமாக உள்ளது. ஆரம்பர வாழ்கை நாம் கேட்கவில்லை அடிப்படை வசதிகள் மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும் என்கிறார்கள்.
இந்த முகாமில் வாழுகின்ற பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றமாக காணப்படுகின்றமையும் அனைத்து மாணவர்களும் மல்லாகம் மகாவி;த்தியாலத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் இவருடைய கருத்துக்கள் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற போது அரசாங்கத்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓவ்வொரு மக்களும் தமது கருத்துகளை இங்கு கூறியிருக்கிறார்கள் இதனால் மல்லாகம் நீதவான் முகாமில் வாழுகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பவேண்டும் என்பது எமது விருப்பமும் கூட எத்தனை நாளுக்கு முகாம் வாழ்வில் அகப்பட்டு இருப்பது அவர்களது இருப்பிடங்களை பார்த்தால் கஸ்ரமாக உள்ளது.







 

Monday, May 21, 2012

MORNING STAR – BORN IN MANIPPAY

1834-   acm printing press founded in manippay
1834-   started with 04 workes
1841- when morning star published – 81 workers: 04 printing machenes
1838  to 1855 – all school books were printed
Salary for a worker – 03 slingsts to 25 slings
1841- out of 81 workers 12 workers were the old boys of batticotta seminary
1841- allor then were Christians or christion supports
1841- 26 workers were full communicant members
1841- the morning star born in manippay
Maruthadyppilliyar kovil now on thevery same place parish hall was built

Friday, May 4, 2012

பெண்கள் எதிர்கால கணவனுடன் எதையும் மனம் விட்டுப்பேசமுடியுமா?

பெண்கள் பலர் மனப்பாரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் திருமணமான பெண்கள் பல சுமைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
பெண்கள் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று கூறமுடியாது அவ்வாறு காதலித்தாலும் 50 மூ மட்டும் திருமணபந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள். திருமணத்தின் இணையும் ஒரு பெண் தனது கணவருக்கு தனது பழைய கால வாழ்க்கையை  கூறவேண்டுமா?   என்ற  போராட்டம் வாழ்க்கை முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.
கணவன் தனது மனைவியை சந்தேகத்துடன் பார்க்கும் போதெல்லாம் அது தப்பானவையாக இருக்கும். அன்பாக  நேசிக்கும் எந்த ஆண்களும் தனது மனைவி; சரியாவை என்றே தோன்றக்கூடும். ஆண்களின் கடந்த கால வாழ்க்கையை பெண்கள்   சுமைகளாக தாங்கிக்கொள்வார்கள். ஒரு ஆண் தனது கடந்த கால வாழ்க்கையை  தனது மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக வாழுகின்றான்.
பெண்ணானவள் குடும்பத்தின் கௌரவம் என்றே எதிர்காலம் ஒப்படைக்கப்படுகிறது. அடிமைத்தனங்களின் திருமணமும் திருமணங்களின் அடிமைத்தனங்களும் பெண்களுக்கு எப்போதும் மறைமுகமாக உள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காதலித்தால் சமூகத்தால் மட்டுமன்றி பெற்றோர்களால் தள்ளிவைக்கப்படுகின்றார்கள். எந்த வொரு பெண்ணும் திருமணமானதும் தனது கடந்த கால வாழ்க்கையை மறைக்கத்தான் முனைவார்கள். இதில் யார் தவறு செய்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே  உள்ளது.

Tuesday, April 17, 2012

மேரி கொல்வினின் பேனாமுனை ஓர் ஆயுதமா?

இலங்கை உட்பட உலகின் பல்வேறு   முனைகளுக்கு சென்று செய்தி சேகரித்த உலகின் புகழ்பெற்ற போர் முனை நிபுணர்களில் ஒருவரான  அமெரிக்கா பெண்மணி மேரின் கொல்வின் சிரியாவில் கொல்லப்பட்டு விட்டார்                 என்ற செய்தி சர்வதேசத்தை ஆட்டிப்படைக்கும் மேற்குலக சக்திகளை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
மேரிகொல்வினின்   இறப்பு   ஊடகத்திற்கு பெரிய இழப்பு 20.02.2012 அன்று              நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இவர் தன்னுடன் ஒரு போட்டோ இதழியரை   அழைத்து சென்று  விட்டார். என்பது மறக்கமுடியதாதது. இவரின் இழப்பிற்கு பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாது          ஊடகவியலாளர்கள்           பலர்       அஞ்சலி செலுத்தியதை நாம் காணத்தவறவில்லை.
இலங்கை பற்றி அவரது பார்வை அதிகமாகவே இருந்தது. இலங்கை மக்களுக்கு             தனது இரண்டு கண்களையும் இழந்தும் தனது போராட்டத்தை   நிறுத்தாமல் தழிழீழ விடுதலைப்புலிகளின் தகவல்களை மேற்குலக நாடுகளில் சமர்ப்பித்தவர். இலங்கை மக்கள் ஒரு தீர்வைப்பெறவேண்டும். இடைக்கால யுத்தத்த்pல் தீர்வு கொண்டு  வரப்பட வேண்டும். நான் எல்லாப்பிரச்சனைகளையும் துணிவுடன் கொண்டு வருவேன் என தனது கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
சண்டே ரைம்ஸ் பத்திரிகையின்            புகழ் பெற்ற வெளிநாட்டு செய்தியாளர் மேரிகொல்வின் இவர் பிறந்தது அமெரிக்கவில் லண்டனில் வசித்து வந்து ஊடகத்துடன்; தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.
வன்முறையை விட பேனா முனை கூரானது  என்பது மேரிகொல்வினின் கருத்து நண்பர் யார் ? எதிரி யார்? என தெரியாமல் மேரிகொல்வின் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டார்.                    இந்தப்பாரிய இழப்புக்கும் தோல்விக்கும் வன்முறையே காரணம் என இந்த விடயத்தில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஓரே கருத்தை தெரிவிக்கின்றனர். ஊடகவியலாளரின் பேனா முனை ஒர் அயுதமா? என்ற கேள்விக்குறி-----------------

Tuesday, March 20, 2012

பேஸ்புக் காதல் தீவிரம்

சமூக தொடர்பாடல் என்பது எல்லாக்காலங்களிலும் புதிய வசதிகளையும்- தொழில்நுட்ப மாற்றங்களையும் இலகுவாக தன்னுள் உள்வாங்கி அதன் உச்சக்கட்ட பயனை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அது, அரசர் காலத்தில் புறாவினூடு ஓலைகளை அனுப்பியதிலிருந்து இன்று சில கணத்தில் எஸ்.எஸ்.எம் மின்னஞ்சல் என்கிற அதிகவேக தொடர்பாடல் நுட்பங்களாக வளர்ச்சி பெற்றிருக்கிற வடிவங்களினூடும் இந்த தொடர்பாடலின் புதிய நுட்பங்களை காதலும் தனக்கு ஏற்ற விதத்தில் எல்லாக்காலங்களிலும் பயன்படுத்தி வந்திருக்கிறது. சமூக தொடர்பாடல் இல்லை என்றால் காதலின் தோற்றம் அவ்வளவுக்கு சாத்தியமாகிவிட்டது. சமூக தொடர்பாடலே காதலின் மூலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் கையெழுத்து கடிதங்களினூடு பரிமாறப்பட்ட காதல் இன்று இணைய அரட்டை, மின்னஞ்சல்கள். குறுஞ்செய்திகளோடு இலகுபடுத்தப்பட்ட வழிகளில் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. நவீன தொடர்பாடல் நுட்பங்களில் இருக்கின்ற வேகமளவுக்கு அபாயங்களும் சேர்ந்தே இருக்கின்றன. வேகமான உலகில் வேகத்தை விரும்பும் பலர் அதற்குள் இருக்கின்ற அபாய எச்சரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. அதுவே பல சிக்கல்களுக்குள் கொண்டு சேர்த்து விடுகின்றது.
பேஸ்புக் காதலினால் காதலி தற்கொலை. காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியதால் பெண்ணின் பெற்றோர் தற்கொலை. அரட்டை- மின்னஞ்சல் ஆதாரங்களை வைத்துக்கொண்டு காதலியையோ- காதலனையோ பலாத்காரம் செய்து ஆதாரங்களை வெளியிடாமல் இருக்க பெருந்தொகைப்பணத்தை கப்பமாக கோரியது இணையதிருட்டுக்கும்பல். இப்படியான செய்திகளை நாளாந்தம் ஊடகங்களில் காணக்கூடியவாறு உள்ளது.
மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் நட்பு ரீதியிலான குறிப்பிட்டளவிலான பேஸ்புக், ஸ்கைப் வடிவங்களினூடான இணைய அரட்டை இறுதியில் காதல் நிலையை எட்டுகிறது.இந்த இடத்தினை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆர்வமும் ஆசையும் தொற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் காதலையும் காதல் மொழிகளையும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
 பெண்ணிடத்திலோ- ஆணிடத்திலோ நேரடியாக காதலை சொல்ல பெருமளவானோருக்கு தயக்கமே. இந்த தயக்கத்தினாலே சொல்லப்படாமல் போன காதல்கள் மில்லியன் கணக்கில் இருக்கலாம். நேடியாக காதலை சொல்ல முடியாதவர்களுக்கு கொஞ்சம் திடத்தை வழங்கி காதலை சொல்ல வைத்தவை குறுந்தகவல்களும் இணைய அரட்டைகளும் சமூகதளங்களின் ஊட பகிரப்படும் தரவிறக்கங்களும் செய்திகளும் ஒரு குறிப்பிட்ட  நபரை நோக்கி மறைமுகமாக தங்களின் ஆர்வத்தை சொல்லி எதிர்தரப்பிடமிருந்து வருகின்ற எதிர்விளைவுகளுக்கு ஏற்ப தங்களின் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். இந்த அடுத்த கட்டத்திலும் இணையமே அதிகம் இருக்கின்றது.

பெண்களின் ஊடகப்பங்களிப்பு

ஏனைய துறைகளைப்போலவே ஊடகமும் தற்காலத்தில் உயரியவளர்ச்சியைப்பெற்றுள்ளது. இதில் பெண்களின் ஊடகப்பங்கேற்பு என்பது காலம் காலமாக கேள்விக்குறியாக்கப்பட்டு வந்துள்ளதோடு அது ஆண்களுக்கு மட்டுமான குறித்து ஒதுக்கப்பட்ட துறையாகவும் ஆணாதிக்க செல்வாக்கை கட்டியெழுப்பியும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் அனேக பாகங்களில் ஊடக வாழ்க்கையை ஆண்களே தம் வசம் வைத்துள்ளனர். விதி விலக்காக சில பெண்களால் மட்டுமே ஆணாதிக்கம் நிறைந்த சில துறைகளில் சாதிக்கமுடிந்துள்ளது.
ஊடகம் என்பது பொதுமக்கள் பிரச்சனைகளை துணிவாகவும் உரிமையுடனும் தட்டிக்கேட்கும் உரிமை கொள்ளல் எனப்படுகிறது. அவ்வாறான உரிமை ஆண்கள் ஆதிக்கம் தான் தட்டிக்கேட்கவேண்டும். பெண்கள் தட்டிக்கேட்டால் பால் சமத்துவ நிலையைக்காட்டி மிரட்டிவிடுகின்றனர். அரசியல் வாதிகளுடன் ஆண் ஊடகவியலாளர்கள் மோதினால் உயிருக்கு ஆபத்து என்பார்கள் அதே வேளை ஒரு பெண் ஊடகவியலாளர் மோதினால் பெண்மைக்கு இழிவாக பேசுவார்கள். இவ்வாறான பால்வேறுபாடு ஏன்? அரசியலில் ஆண்களை விட பெண்கள் முன்நிலையில் நிற்கிறார் இந்த மாதிரி ஊடுகத்திலும் பெண்களுக்கு சமபங்கேற்பு கிடைக்கவேண்டும்.
பல ஊடக நிறுவனங்களில் பொது விடயம் சார்ந்த பிரச்சனைகளை ஆண்களிடம் தான் ஒப்படைப்பார்கள். அதே பிரச்சனைகளை பெண்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆண்களுடன் பெண்களும் சம பங்கேற்பு ஊடகத்தில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லை எனில் ஊடகத்தை பெண்கள் ஏன் கற்கவேண்டும். பாரம்பரியமாகவே ஆண்களின் ஆதிக்கமானது பெண்களின் நடமாட்டத்தையும் பங்குபற்றலையும் கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் பல்வேறுபட்ட உபாயங்களையும் வழிமுறைகளையும் பிரயோகித்து வந்துள்ளது.
மேற்கூறப்பட்ட பிண்ணனியில் ஊடகங்களில் பெண்கள் இல்லாதிருப்பதுடன் பெண்களின் பிரச்சனைகள் தொடர்பான கவனிப்பும் குறைவாகவே உள்ளமை தெளிவாகும். எனினும் பரந்த அணுகுமுறைகளுக்கமைய பெண்கள் வித்தியாசமான முறையில் ஊடகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பெண்கள் தனிமையாக அல்லது குழுக்களாக தமக்கு இயல்பான வகையில் ஊடகத்தளம் சார்ந்து செயற்படுகின்றனர். ஆணாதிக்கம் தழுவிய கருத்தியலை உள்வாங்கிக்கொண்ட ஆண்ஊடகவியலாளர்கள் சமூகத்தை கருத்தில் கொள்வதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்ஊடகவியலாளர்கள் தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் ஊடகங்களில் பெண்களின் தலைமைத்துவம் என்பதோ, பங்குபற்றல் என்பதோ முற்றிலும் பெண்நிலை சார்ந்த விடயமாக இடம்பெறுவதில்லை. அவ்வாறின்றிப் பெண்கள் தமது சுய திறமையாலும் தன்னாற்றல் மூலமும் இயல்பான ஊடகப்பிரவேசம் செய்வதென்பது முதன்மையாக காணப்படுகின்றது. ஊடகத்தளத்தில் அப்பால் ஏனைய நிர்வாகத்துறைகளிலும் இலங்கையில் பெண்களின் நியமனம் விதந்துரைக்கப்படுகின்றது.
இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபன பெண்ஊடக அறிவிப்பாளர்கள் திருமதி. இராஜேஸ்வரி சண்முகம் முதலான பெண் அறிவிப்பாளகள் பல தரப்பட்டவர்கள் இப்போதும் காணப்படுகின்றனர்.

Sunday, March 4, 2012

வெள்ளை மாளிகையில் அல்லி ராஜ்ஜியம்

வெள்ளை மாளிகையில் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார் ஒபாமா மனைவி மிஷெல் என்று அமெரிக்கா பத்திரிகையாளர் ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஓபாமாவின் மனைவி மிஷெல் எளிமையானவராகவும் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராகவும் இருப்பர். ஆனால் அவரது இன்னொரு முகத்தை பலரும் அறியமாட்டார்கள். அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் அதிகாரிகளை கேட்டால் அந்த முகத்தை தெரிந்து கொள்ளலாம்.
இப்படி ஆரம்பித்து அவரைப்பற்றியும் ஒபாமாவைப்பற்றியும் பல்வேறு தகவல்களை ஒரு புத்தகமாக எழுதியுளளார் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜோடிகன்டார். இன்று வெளியாகியுள்ள தி ஒபாமாஸ் என்ற அந்தப்பகுதிகளை பெற்று ஏ.பி நியூஸ் ஏஜென்ஸி வெளியிட்டுள்ளது. அதில் மிஷெல் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராக இருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார் என்று கூறி சில சம்பவங்களையும் குறிப்பிட்டிக்கிறார்.
மேலும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி இமானுவேல். அதிபரின் முன்னாள் ஆலோசகர் ரொபர்ட் கிப்ஸ் ஆகியோருடன் மிஷெல் மோதிய சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஆண்டில் மருத்துவக்காப்பீடு திட்ட மசோதாவை ஒபாமா கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பான கருத்து வெளியாயின. அந்தத்திட்டக்கொள்கைகளை சரியாக கவனிக்கவில்லை. என்று இமானுவேலிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார் மிஷெல். இதனால் மனம் நொந்த இமானுவேல் இராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால் அதை ஒபாமா  ஏற்றுக்கொள்ளவில்லை.இன்னொரு சமயம் அதிபரின் உதவியாளர்கள் யாருமே சரியில்லை வெள்ளை மாளிகையில் புது டீம் கொண்டு வர வேண்டும் என்று மிஷெல் திட்டியிருக்கிறார்.
ஒரு முறை பிரான்ஸ் அதிபரின் மனைவி கர்லா புருனி சர்கோஸ் வந்த போது அவரிடம் மிசெஷல் வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் யாருமே சரியில்லை. இங்கு வசிப்பது நரகம் போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் கிப்ஸ் கடும் கோபமடைந்திருக்கிறார். இது போலே பல சம்பவங்கள் குறிப்பிட்டுள்ள நிருபர் கன்டார். இது பற்றி ஒபாமா மற்றும் மிஷெலிடம் கருத்து கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். இந் நிலையில் புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில் சாதரணமாக நடந்த விடயங்களை மிகைப்படுத்தியும் கற்பனைகளை சேர்த்தும் எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.

Sunday, January 15, 2012

அன்று போல இன்றும் சேரிப்புற மக்களின் வாழ்வு


பொருளாதாரம் , கல்வி , தொழிநுட்பம் என பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி கண்டுவருகின்ற மாநகரமே சென்னை. இது தழிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தபோதும் இவ்வளர்ச்சிக்கு கரும்புள்ளியாக இடையிடையே காணப்படும் சேரிகள்.
சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாக கவனிப்பவரற்றவர்களாக பல தரப்பட்ட சேரிப்புறமக்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களது ஒருநாள்  வாழ்வு ஒரு யுகம் போன்று கழிந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் கூவையாறு ,நெடுஞ்செழியன், அயோத்தியநகர், பல்லவநகர் இந்த மாதிரி பலசேரிப்புறங்கள் உள்ளன. இந்த சேரிப்புறங்களில் வாழும் மக்கள் அடிப்படைத்தேவைகளாக உணவு, உடை, உறையுள் என்பவற்றை தினமும் அனுபவிப்பது சிரமானதே என்றே கூறலாம். குப்பைகூழங்களை கொட்டுவதால் ஒரே இடத்தில் தேங்கிநி;ன்று துர்நாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. கூவங்களை இக்கழிவுநீர் சென்றடைவதால் கூவம் ஆறு மாசடைந்து காணப்படுகின்றது. ஏறத்தாழ 50 வருடங்களுக்கு முன்னர் மிகவும் சுத்தமாக காணப்பட்ட இந்த ஆறுகள் இப்பொழுது கவனிப்பரற்று அனைத்துக்கழிவுகளையும் தன்னுள் உள்ளடக்கி அசுத்தமாக காட்சியளிக்கின்றது.
ஓவ்வொரு சேரிப்புறங்களும் மிகவும் சிறியது அதற்குள் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏதோ ஒரு எதிர்பார்ப்பிலே வாழும் அந்த மக்களில் பெரும்பாலும் பெண்களே தமது அன்றாடத்தேவைக்களுக்காக வெட்டப்பட்ட ஆடுகளின் கால்களினை எடுத்து அதில் உள்ள மயிர்களை அகற்றி அதனை நெருப்பில் சுட்டு விற்கிறார்கள். இதன்மூலம் நாளில் 200 ரூபா கிடைக்கின்றது. அந்தப்பணத்தில் தமது அன்றாடத்தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள் சேரிப்புறப்பெண்கள்.
ஓவ்வொரு சேரிப்புறங்களிலும் 150 க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் தேவைப்படும் அந்த மக்கள் மற்றைய காலங்களில் அரசாங்கத்திற்கு எதிரிகளாக காணப்படுகின்றனர். ஒரு பார்வையில் பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் மறுபார்வையில் போலிவாழ்க்கையை நடத்;துகின்றனர் சேரிப்புறமக்கள். வேலை இன்றி வெட்டியாக இருக்கும் சில ஆண்கள் என இயல்பற்;ற சமூகம் பழியை அரசு மீது சாடும் நியாயமற்ற மனிதர்கள் தான் இவர்கள்.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள், கோயில்கள், பல்கலைக்கழகங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது சிங்காரச்சென்னை. இதன் மறு பக்கமாக சேரிப்புறங்கள் இந்த சேரிகளில் வாழும் மக்கள் உண்மையில் வாழுகின்றனர் என்று கூறமுடியாது வாழப்போராடுகிறார்கள் என்பதே குறிக்கோளாகும். 

   

Friday, January 13, 2012

மாவிட்டபுரம் ஒரு பார்வை

யாழ்ப்பாணத்தில் வடமேற்குத்திசையில் ஏறத்தாழ 15 கிலோமீற்றர் தொலைவில் மாவிட்டபுரம் அமைந்துள்ளது. அங்கே கோயில் கொண்டருளும் ஆலயம் மாவிட்டபுரக்கந்தசுவாமி ஆலயமாகும். இது மா என்றால் குதிரைமுகம் நீங்கிய தலம் என்றும் கி.பி 07ம் நூற்றாண்டில் இந்தியதிசையுக்கிய சற்சன சோழப்பெருமன்னனின் மகள் மாருதப்புரவீகவல்லியின் குதிரைமுகம் நீங்கிய தலமே மாவிட்டபுரம்.
அரச குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து தேடிவந்து தரிசித்தனர் என்பதானாலும், மாருதப்புரவீகவல்லியின் கொடிநோய் நிங்கியதனாலும் நன்றிக்கடனாக இக்கோயிலைக்கட்டினார் என்றும் வரலாற்றுரீதியாகவும், வைபரீதியாகவும் கூறப்படுகிறது.
இத்தலத்தின் கட்டிடங்களும், சிற்பங்களும் மிகவும் பழமைவாய்ந்தாக காணப்பட்டது என்றும் 1990ம் ஆண்டில் வடக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடிக்கப்பட்டது என்றும் தற்போது அதன் வேலைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் இன்னும் 03 மாதகாலங்களில் அனைத்து சிலைகளும் நிறைவடைந்துவிடும் என்றும் ஆலயப்பரிபாலசபையினரான ஆனந்தயோகேந்திரன் தெரிவித்தார்.
மாவிட்டபுர மகோற்சவக்காலம் ஆடியில் இடம்பெறும்.15 வது தினமாகிய ஆடிஅமாவாசை அன்று முருகன் திருவுலாச்சென்றருளி மாவிட்டபுரத்தில் இருந்து 05 கிலோமீற்றர்தூரத்தில் உள்ள கீரிமலை புனித தலத்தில் தீர்த்தஉற்சவம் நடைபெறும். யாழ்ப்பாணக்குடாநாட்டில் இறைபதம் அடைந்தவர்களின் அஸ்தி எனப்படுகின்ற திதி செய்யப்படுதல் இந்தத்தீர்த்தத்தில் ஆகம். அதுவே ஆடிஅமாவாசை சிறப்புமிக்க விரதமாகும். தினந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப்பூசைகள் இடம்பெற்று வருகின்றன.

Thursday, January 12, 2012

பண்பாட்டு மண்ணில் பாரம்பரிய கலை


 ஈழத்தில்  பொதுவாக பாரம்பரிய கலைகள் மருவி வருகின்ற சூழ்நிலையில் யாழ் மண்ணில் தமிழர்  தம் வாழ்வியலை பிரதிபலிபக்கின்ற கலைவடிவங்களை இன்றைய இளம் சமுகம் மத்தியில்  தெரியப்படுத்தும் நோக்கில்  தென்னிந்தியாவின்  ஆதித்தமிழர் இயக்கத் தலைவர்  ஆடல் அரசு என்றழைக்கப்படுகின்ற வேணு அவர்கள்   யாழ் மண்ணில் நிகழ்த்திய ஆற்றுகை எம் பாரம்பரிய கலைகளுக்கு மேலும் புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறது
 யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையமும்  செயற்திறன் அரங்க இயக்கமும் இணைந்து ஒருங்கமைத்த  பாரம்பரிய கலைகளின் வடிவம் என்ற இந்நிகழ்சி யாழ்மண்ணில் பல இடங்களில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது  
 முதலில் யாழப்பாணப் பல்கலைக்கழகத்தில்  அரங்கேற்றப்பட்ட இப்பாரம்பரிய  கலை வடிவங்களின்  ஆற்றகை பார்வையாளர்களின்  மனதில்  பெரும் களிப்பினை உண்டு பண்ணியது  அதனை தொடர்ந்து 2வது தடவையாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில்  அரங்கேற்றப்பட்ட போது  அங்கு பிற மாவட்டங்களை  சேர்ந்த  மாணவர்கள்  கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில்  அவர்களின்  அவாவாக  இருந்தது இவ்வாறான கலைவடிவங்களின் ஆற்றுகைகளை   தமது பிரதேசங்களிலும் அரங்கேற்ற வேண்டும் என்பதே. மேலும் அவர்கள் கூறுகையில் இவ்வாறான கலைவடிவம்  பற்றி பாடப்புத்தகம்  வாயிலாகவே படித்திருந்த தமக்கு  முதன் முறையாக  தற்போது  தான் செயன்முறை  வடிவில் பார்க்கின்ற  வாய்ப்பை தமிழ்நாட்டு  கலைஞன் வழங்கியிருக்கிறார் என்பதே பொதுவாக நோக்கும்  போது இன்றைய காலகட்டத்தில்  பரதம் என்கின்ற பரதநாட்டித்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்  அதாவது மக்கள்  அதன் மீது  கொண்டுள்ள  ஈடுபாடு  அதை நிலைநாட்ட வேண்டும் என்பதில் காட்டுகின்ற  ஆர்வம் எமது பாரம்பரிய  கலைகள் மீது அவர்கள் வைப்பது இல்லை  இவ்வாறான சூழ்நிலை நிலவுகின்ற போது தமிழ் நாட்டின்  சென்னை பல்கலைக்கழகத்தினால்  நெறிப்படுத்தப்பட்டு வருகின்ற  முற்றம் கலைக்குழு என்ற அமைப்பினை   தற்போது  நிர்வகித்து வருகின்ற  ஆடல் அரசு என்கின்ற   வேணு  அவர்களை  கொண்டுஇ   சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்த காலத்தில்  இவ்முற்றம் கலைக்குழவை  ஆரம்பித்து வைத்த  தற்போதய  யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலையம்  மற்றும் செயற்திறன் அரங்க இயக்கத்தின்  இயக்குனர் தே.தேவானந் அவர்கள்  இன்று  முன்னும் கொண்டு வந்துள்ளார்.
 புழுதியின் கீதங்கள் இ எல்லாம் சரிவரும் இ அக்கினி பெருமூச்சு இவண்டியும் தொந்தியும் இ எனபல்Nறு நாடகங்களை  நெறியாள்கை செய்து வருகின்ற தே. தேவானந் அவர்கள் தற்போது  பாரம்பரிய  கலைவடிவங்களை  எம் மண்ணில்  வளர்த்தெடுப்பதிலும் தன்னை  ஈடுபடுத்தியுள்ளார். இதன் ஆரம்ப கட்டமாகவே தமிழ்நாட்டின்  நாட்டார் கலையாக விளங்குகின்ற பாரம்பரிய கலைவடிவங்களான  சாட்டைக்குச்சி இ தப்பாட்டம் இஒயில்இகும்மிஇ ஆதிவாசி நடனம் ஆகிய கலைவடிவங்களை   யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவர்களையும்;  மற்றும் செயற்திறன் அரங்க இயக்கத்தின் நாடக மாணவர்களையும்  கொண்டு இக்கலை வடிவங்களை  அரங்றே;றுவதற்கு திட்டமிட்டு  அதில் வெற்றியும் கண்டுள்ளார். இப்பாரம் பரிய கலைவடிவங்களை  ஈழத்தமிழர் மத்தியில்  கொண்டு வந்த பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தேர்தலுக்கான மீள்குடியேற்றம்

வடக்கில் 15 வருடங்களுக்கு முன்னர்  இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்;ந்த நாகர்கோவில் மக்கள் கடந்த உள்ளராட்சி தேர்தல் முன்னிட்டு தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சொந்தஇடங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் சிலரின் அனுபவங்கள் சிலவற்றை அறிந்து கொள்வதற்காக அக்கிராமத்திற்கு சென்றிருந்தோம். அக்கிராமத்தை சென்றடையும் போது மனதில் பல காட்சிகள் தோன்றின. தகரத்தினால் வேயப்பட்ட சின்னஞ்சிறிய குடிசைகள் ஆங்காங்கே  தென்பட்டன. எங்கும் கண்ணிவெடி அபாயம் என்ற பதாகைகளை தான் காணமுடிந்தது.
     தொடர்ந்து பல குடிசைகளைத் தாண்டிச்சென்ற போது கடற்தொழிலாளியான இமானவேல் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அக்கிராமம் பற்றிய விடயங்களை அவர் அதிகமாகவே அறிந்திருக்கிறார். 1996 ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வின் பின் கடந்த ஆனி மாதம் 23ம் திகதி இக்கிராமத்தில் 90 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன 30 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது; என்றும் அவர் குறிப்பிட்டார். இம் மக்களுக்கு ;சோபா நிறுவனம் பல உதவிகளை வழங்கிய போதும் தமது அடிப்படைத்தேவைகள் 06 மாத காலமாகியும் பூர்த்தி செய்யப்படவில்லை; ஆரம்ப கட்டமாக குடிநீர்வசதி, மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.                     தொடர்ந்து குடும்பப்பெண்ணான செல்வமாலினி என்பவரை சந்தித்தோம். எமது கேள்விகளுக்கு சலித்துக்கொள்ளாமல்  பதி;ல் கூறத்தொடங்கினார்.  எனக்கு இரண்டு குழந்தைகள் எனது கணவர் முச்சக்கரவண்டி சாரதியாக இருக்கிறார். ஒரு நாள் வருமானம் 600 ரூபா எமக்கு இந்த வருமானம் போதாது உள்ளது. உலர் உணவு என்பது இது வரைக்கும் கிடைக்கவும் இல்லை மிகுந்த சிரமத்தைஎதிர்நோக்குவதாக வும் கூறினார்.      
15வருடங்களுக்கு முன் பிருந்த சொந்தங்கள்; மீண்டும் கிடைக்குமா? என்றார் கணேசலிங்கம். நாம் இங்கு வந்த 05 மாத காலங்கள் இது வரைக்கும் 12 தகரங்களுடன் அரைவீட்டுத்திட்டம் கிடைத்திருக்கின்றது. அகதி முகாம்களில் நெருக்கமான குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் இருந்து பல சவால்களை எதிர்நோக்கிய நாம் சொந்த மண்ணில் குடிசை போட்டு வாழ்ந்தால் கூட நிம்மதியுடன் வாழலாம் எம் மண்ணில் கால் பதித்த போது என் பழைய கால நினைவுகன் மீண்டும் திரும்பின ஒன்றாய் மாலை வேளையில் கூடியிருந்து கதை பேசியது எனகென்று ஒரு நண்பர் கூட்டம் சொந்தங்களின் கொண்டாட்டங்கள் மீண்டும் கிடைக்குமா அந்த நிலாக்கால நினைவுகள் என வருத்தத்துடன் கூறினார்.
      நாம் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார் கனகேந்திரன். எமது கிராமத்தில் கண்ணிவெடிகள் முழுமை யாக அகற்றப்படவில்லை முதலில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும் கால்களை எடுத்து வைக்கும் போது பயத்தினை உணர்கின்றேன் குப்பைகளை கொழுத்தி விட்டு தூரத்தில் சென்று நிற்கவேண்டி உள்ளது. 1996  ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்று இறுதிக்கட்ட வன்னியுத்தத்தில் சொந்தங்களை இழந்து தனியாக வாழ்ந்து வருகின்றேன். என்று கூறும் போது அவரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிந்தது.       சொந்த மண்ணில் காடுகளிற்கும் பற்றைகளுக்கு நடுவில்; கண்ணிவெடிகள் மத்தியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் சிரமங்கள் வெளி உலகிற்கு தெரியாது. போரின் போதும் அகதி வாழ்விலும் பட்ட சிரமங்களைவிட இவை மோசமானவை அத்தியஅவசிய பொருட்களை வாங்கு வதற்கு பருத்தித்துறை சந்தைக்கு ஒருநாள் பயணம். வடக்கில் ஏற்பட்ட யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட கிராமங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மக்கள் விடப்பட்ட நிலையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.ம் 12தகரங்கள் கொடுக் கப்பட்டு அரைவீட்டுத்திட்டம் கிடை த்திருக்கின்றது. அகதி முகாம்களில் நெருக்கமான குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் இருந்து பல சவால்களை எதிர்நோக்கிய நாம் சொந்த மண்ணில் குடிசை போட்டு வாழ்ந்தால் கூட நிம்மதியுடன் வாழலாம் எம் மண்ணில் கால் பதித்த போது என் பழைய கால நினைவுகன் மீண்டும் திரும்பின ஒன்றாய் மாலை வேளையில் கூடியிருந்து கதை பேசியது எனகென்று ஒரு நண்பர் கூட்டம் சொந்தங்களின் கொண்டாட்டங்கள் மீண்டும் கிடைக்குமா அந்த நிலாக்கால நினைவுகள் என வருத்தத்துடன் கூறினார்.
      நாம் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார் கனகேந்திரன். எமது கிராமத்தில் கண்ணிவெடிகள் முழுமை யாக அகற்றப்படவில்லை முதலில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும் கால்களை எடுத்து வைக்கும் போது பயத்தினை உணர்கின்றேன் குப்பைகளை கொழுத்தி விட்டு தூரத்தில் சென்று நிற்கவேண்டி உள்ளது. 1996  ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்று இறுதிக்கட்ட வன்னியுத்தத்தில் சொந்தங்களை இழந்து தனியாக வாழ்ந்து வருகின்றேன். என்று கூறும் போது அவரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிந்தது.       சொந்த மண்ணில் காடு களிற்கும் பற்றைகளுக்கு நடுவில்; கண்ணிவெடிகள் மத்தியில் மீள்குடியே ற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் சிரமங்கள் வெளி உலகிற்கு தெரியாது. போரின் போதும் அகதி வாழ்விலும் பட்ட சிரமங்களைவிட இவை மோசமானவை அத்தியஅவசிய பொருட்களை வாங்கு வதற்கு பருத்தித்துறை சந்தைக்கு ஒருநாள் பயணம். வடக்கில் ஏற்பட்ட யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட கிராமங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மக்கள் விடப்பட்ட நிலையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.

மறக்கமுடியாத இந்தியப்பயணம்

எமது ஊடகப்பயணமானது இரண்டாவது தடவையாக தமிழ்நாட்டுப்பயணம். இந்த ஊடகப்பயணத்தில் இந்தியா சென்று யாழ்ப்பாணம் வரும் வரை பல அனுபவங்கள் தோன்றியுள்ளது. கொழும்புப்பயணத்தின் அனுபவப்பகிர்வு யாழ்ப்பாணம் வந்தும் மறப்பதற்கு ஒரு வாரம் சென்றது. இது தமிழகப்பயணமல்லவா? அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? யாழில் இருந்து கொழும்பு செல்லும் போது சாதரணமாக இருந்தது. ஆனால் 12.30 மணியளவில் விமான நிலையத்தில் இறங்கி  இருந்த இடங்களில் சின்னத்தூக்கம் போட்டது இன்றும் மறக்கமுடியாதது  காலை 04.00 மணியளவில் விமானநிலையத்தினுள் நுழைந்தோம்.  சென்றதும் விமானமா? எத்தனைபதிவுகள், எத்தனை சோதனைகளின் பின்னர் அங்கு விமனத்திற்கு செல்வதற்கென பதிவுகளை செய்து விமானத்தில் பயணித்தது புது அனுபவம். காலை 08.30 மணிக்கு எமது கால் சென்னை விமானநிலையத்தில்  பதிந்தது. சிறுது ரேம் என் கண்கள் அங்கும் இங்கும் அலைந்து சென்றது.  அங்கிருந்து சென்னை சாந்தோம் தங்குமிடத்திற்கு சென்றோம்.  எல்லோரையும் ஒரு மணிநேரத்தின் பின்னர் ஓய்வு எடுத்து விட்டு வருமாறு பணிக்கப்பட்டோம்.  எனக்கு  ஒரு மணி நேரம் போதாது போல் இருந்தது. என்ன செய்வது குட்டித்தூக்கம்  போட்டோம். அதிகாலைச் சூரியனில் கடற்கரை மணல் மீது நின்று மெரினாவில் உடற்பயிற்சி செய்த அனுபவம் புதியது. காது இனிக்க கேட்க கடலலை ஓசை உடலில் படும் உப்புக்காற்று உற்சாக மூட்ட நண்பர்களோடு இணைந்து செயற்பட்டோம்.
முதல் நாள் சேரிப்புறங்களுக்கு களப்பயிற்சிக்காக செல்வதற்கான ஏற்பாடு சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து நாமும் சென்றோம் சேரிக்கு சென்றது எனக்கு புதிய அனுபவம்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி கதைப்பது என்பது மிகவும் கஷ்ரமாக இருந்தது. அவ்வாறான நிலையில் மூன்று தொலைபேசியைக்கொண்டு நாளுக்கு இரண்டு நாள் கதைப்போம். அதுவும் நாங்களாக எடுக்க முடியாது. அவங்கள் எடுத்தால் மட்டும் 05 நிமிடம் பேசுவோம். எல்லோரிடமும்  கொடுத்து வாங்குவது மிகவும் கடினமாக இருந்தது. 
சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து நாம் தங்கியிருந்த இடம் வரை நண்பர்களோடு இணைந்து ஒரு நாள் நடந்தே சென்றோம் இது ஒரு அனுபவம்.
சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் இனைந்து சென்னையின் நகர் பகுதிகளிற்கு பயணம் செய்து அவர்களுடனும் எமது மாணவர்களுடனும் சேர்ந்து நான் சினிமாவில் பர்த்த இடங்களை நேரில் பார்த்தேன். சினிமாவில் இந்த இடங்களை பார்க்கும்  போது ஆசையாக இருக்கும். இது வரைக்கும்  இலங்கையில்  கூட பல இடங்களுக்கு செல்லவில்லை. வரலாற்று இடங்களை பார்வையிட்ட இடங்கள் ஒவ்வொன்றுமே மிகவும் பயணுள்ள இடங்களாக அமைந்ததோடு புதுப்புது இடங்களாகவும் புதிய அனுபவங்களையும் தந்தது. ஆனால் சென்றவுடன் தர்மினி அக்கா எங்களிடம் சுநிழசவ கேட்பா அதனால் பஸ் ஓட ஓட எழுதியது மறக்கமுடியதாதது.
இறுதி நாளன்று இந்தியாவை விட்டு இலங்கை வருவதற்கு தயாராகி சென்னை சென்னை பல்கலைக்கழகத்தில் இறுதி ஒன்று கூடல் இடம்பெற்றது. அந்த ஒன்று கூடலின் முன்னரே எமது இயக்குணர் தே. தேவானந் சேர் கூறினார் இன்று எமக்கு இலங்கை செல்வதற்கு 03.00 மணிக்கு விமானம் பதியப்பட்டுள்ளது நாம் அனைவரும் 12.00 மணிக்கு விமான நிலயத்திற்கு செல்ல வேண்டும் அதற்கு முன்னர் நாம் இந்தியாவிலிருந்து இலங்கை செல்வதற்கான விமானப்பதிவுப்பத்திரத்தை எடுக்கவேண்டும் அதனால் நாம் எல்லோரும் 11.00 மணியளவில் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்டு விட என்று கூறினார். 
பழகினர்வர்களை பிரிவது என்பது எல்லோருக்குமே கஷ்டம் தான். அன்று எல்லோருமே பயணத்தை மறந்து தாம் பழகிய உறவுகளுடன் கூடிக்கதைப்பதுவும் தமது குறிப்புத்தகத்தில் ஓட்டோகிறாப் வாங்குவதுமாக நின்றதனால் ( நானும் தான் ) நாம் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மீளப்பதிவு அலுவலகத்திற்கு செல்லும் நேரம் சென்று விட்டது. ஒரு வாறாக படிவங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட்டு 01..30 மணியளவில் அலுவலகத்தில் இருந்து இந்திய விமான நிலயத்திற்கு செல்ல புறப்பட்டு அங்கு 02.05 மணிக்கு போய் சேர்ந்தோம். சென்னைப்பல்கலைக்ழக மாணவர்கள் எம்முடன் கூடவே வந்து அனுப்பி வைத்தார்கள்.
அங்கு எமக்காக விமான நிலைய ஊழியர்களும் அவசர அவசரமாக எம்மை சோதனை செய்து உள்ளே அனுப்பினார்கள் உள்ளே அவசர அவசரமாக எமது பரிவுகளை மேற்;கொண்டார்கள். அந்த வேளை எனது பொதிப்பை பிரிந்து விட்டது. அதற்குள் இவ்வாறு ஆகிவிட்டதே என்று நான் மிகவும் வேதனைப்பட்டு 250.00 ரூபா செலுத்தி பதிவுகளை மேற்கொண்டேன். அந்த நிகழ்வு பற்றி நான் வீடு சென்றும் எல்லோருக்கும் சொல்லியது மறக்கமடியாதது.  எல்லாருமே பதிவுகளை முடித்து விட்டு  ஒரு வாறு விமானத்தினுள் ஏறிக்கொண்டோம்.  நாங்கள் சென்னை செல்லும் போது காதுகள் எல்லாம் அடைத்தன. ஆனால் இலங்கைக்கு வந்த சந்தோசத்தில் விமானப்பயணம் மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது. 04.30 மணிக்கு இலங்கை விமானநிலையத்தில் இறங்கினோம். ஆனால் யாழ்ப்பாணம் வருவதற்கு பஸ்ஸிற்கு காத்திருந்தது ஒரு மணிநேரம். 06.30 மணிக்கு பஸ்ஸில் ஏறினோம். யாழ்ப்பாணப்பயணம் மாணவர்களுடன் சந்தோசமாக கழிந்தது.


 

பண்பாட்டில் மாறாத பழங்குடியினர்

நாட்டின் வளரச்சியில் தனித்துவம் மிக்கவர்கள் ஆண்களே. பெண்வழி சமுதாயத்தின் பின்வழி என்று பேசப்படும் இடம் தான் இந்தியாவின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி என்னும் பிரதேசம். கடந்த மாத இறுதியில் யாழ் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சிமைய முழுநேரகற்கைநெறி மாணவர்கள் கற்கை நெறியின் ஒரு பகுதியாக 15 நாட்களை கொண்ட தமிழ்நாடு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டிருந்தோம். அந்த வகையில் நீலகிரி       மாவட்டத்தில்   உள்ள ஊட்டிக்கு சென்றிருந்தோம்.
அங்கு குறும்பர,; இருளர.; தோட்டாஸ் என்கின்ற பழங்குடி மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வியல் சம்பந்தமாக அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.
எழுத்து வடிவமே இல்லாத ஒரு மொழி இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் இம் மக்கள் பேசுகின்ற மொழிக்கு எழுத்து வடிவமே கிடையாது. பெயரில்லாத ஒரு வகை மொழியினை பேசிக்கொள்கின்றனர். எழுதுவதற்கு இன்று தமிழையே பயன்படுத்தி வருகின்றனர்.
இம் மக்கள் ஆரம்பத்தில் படிப்பறிவற்றவர்களாக காணப்பட்டனர்.  காட்டில் வேட்டையாடுதல், மீன்பிடித்தல,; சுள்ளிபொறுக்குதல், போன்றவற்றை தொழிலாக கொண்டிருந்தனர். படிப்படியான முன்னேற்றம் இவர்களது வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இவர்கள் வாழ்கின்ற காட்டுப் பகுதி அரசசொத்துடமை ஆக்கப்;பட்டுள்ளது. இந்த மக்கள் பாரம்பரியமாக வாழ்கின்ற இடத்திலிருந்து எழுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இவ் வனப்பிரதேசத்தில் சுள்ளி பொறுக்கவதற்கும், வேட்டையாடுவதற்கும் இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இம் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் கலாச்சாரத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இவர்கள் வேறு இனப்பெண்ணை அல்லது ஆணை திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்வதி;ல்லை. இருளர் இன மக்கள் மாமன் பெண்னை அல்லது ஆணை திருமணம் செய்ய வேண்டும். இன்று குறும்பர் இனத்தவர்கள் வேற்றுத்திருமணத்தை ஏற்றுக்கொள்கின்றனர்.
இவர்களின் வீட்டிற்கு செல்பவர்கள் திண்ணை மட்டுமே செல்லமுடியும். உள்ளே செல்ல அனுமதிப்பதில்லை. இறைவனின் எழில் ஓவியங்களாய் பரந்து விரிந்து கிடக்கும் கிராமங்களில் வாழும் மக்களையும் அவர்களின் மரபு மொழிநடை பழக்கவழக்கம், பண்பாடு, நம்பிக்கை, சமய கலாச்சாரம், தொழில் வேடிக்கை வினோதம் கலை இலக்கியம் பண்பாடுகளை பிரதிபலிக்கும் பிம்பங்களே கிராமிய பாடல்கள். இத்தகைய பாடல்கள் இருளர் குறும்பர் இனத்தவர்கள் ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.
இவர்களுக்கு மரணம் சம்பவித்தால் எமது முறைகளை போல சில இறப்புக்காரியங்களை நிறைவு செய்த பின்னர் அவர்கள் அடக்கம் செய்வார்கள். கிரேக்கத்தில் காணப்பட்டது போன்று இறந்தவர்களை வழிபட்டால் அவர்களின் உடற்பாகங்களை உட்கொண்டால் அதீத சக்தி கிடைக்கும் என எண்ணிக் உட்கொண்டனர். இவர்கள் அவர்களை போல் இல்லா விட்டாலும் அடிப்படை பண்பான நம்பிக்கை இறந்தவர்களினால் அதீத சக்தி கிடைக்கும் என்பதிலிருந்து பிறக்கின்றது. எல்லாவற்றிற்கும் மேலானவர் கடவுள் என எமது சமுதாய மரபுகளின் படி வணங்குகின்றோம். இவர்கள் தமது மூதாதையர,; இறந்தவர்களை வணங்கி வளிபட்ட பின்னரே இரண்டாவதாக கடவுளை வணங்குகின்றனர்.
நாட்டின் தனித்துவம் மிக்கவர்கள் என பலநாடுகளில் போற்றப்படும் ஆண் சமுகம் இவர்களிடத்தில் இரண்டாவதாகவே பார்க்கப்படுகினறது. இங்கு தாய் வழி சமுதாய முறைமை பின்பற்றப்படுகின்றது. எந்த முடிவை எடுப்பதாயினும் அதை பெண்னே தீர்மானிப்பதாய் அமைகின்றது.
இன்று திருமணத்திற்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது வரதட்சணை. பல பெண்கள் திருமண வயதை அடைந்தும் வாழ்ககை துணையில்லாமல்  வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இவர்கள் சமுதாயத்தில் வரதட்சணை கொடுமையோ மாமியார் கொடுமையோ இல்லை.
ஆன்மா ஒடுக்கும் இடம் தான் ஆலயம். இந்த ஆலயத்தில் தோட்டஸ் பழங்குடி இனப் பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆலயத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கல் ஒன்று நடப்பட்டுள்ளது. அந்த கல்லை தாண்டி பெண்கள் வழிபாடுகளை மேற்கொள்ள முடியாது.
மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப இந்த பழங்குடியினர் தம்மை மாற்றி அமைக்க முயல்கின்றனர். இன்று யாவரும் ஓரளவிற்கு எழுத்தறிவு, வாசிப்பு வீதத்தினை பெற்றுள்ளனர். தமக்கான ஒரு மொழி இருந்தாலும் தமிழை எழுதுவதால் இன்று கதைத்து தேர்ச்சி அடைந்தவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் இவர்களின் சமுகத்தில் இருந்து தாதியர,; ஆசிரியர், சட்டத்தரணி, வைத்தியர் என பல்துறையிலும் உருவெடுக்கின்றனர். காலப்போக்கில் இவர்கள் கல்வி முறையில் கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும்.
இம் மக்களுக்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை. சுற்றுலாப்பயணிகளால் அசுத்தம் செய்யப்படும் நீரினையே வடிகட்டி பாவித்து வருகின்றனர்.
அரசாங்கத்தினால் இவர்களுக்க நில ஒதுக்கீடு இன்னும் வழங்கப் படவில்லை. தற்போது இவ் விடத்தை விட்டு எழுமாறு பணிக்கப்பட்டுள்ளனர் என வருத்தத்துடன்  கூறினார்கள்  மின்சார வசதிகளுக்கு அரசின் அனுமதி இன்னும் கிடைக்கப்பெறவில்லை. பாரம்பரியமாகவாழ்ந்து வருகின்ற இடம் அரச சொத்துடமை ஆக்கப்பட்டுள்ளமையால் சொந்த இடமின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் ஒரு வகை மொழி பேசினாலும் எழுத்து வடிவம் இன்மையால் காலப்போக்கில்  இவர்களது மொழி அழிவடைய கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இந்த மக்கள் வாழ்வியலில் முன்னேற்றம்  ஏற்பட்ட போதும் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ்வது வரவேற்கத்தக்கதே.

மீளாத நிலையில் மீள்குடியேற்றம்

தொலைந்து போன வசந்தங்களை தேடி தெல்லிப்பளை கிராம மக்கள் நகர்வடைந்து கொண்டிருக்கிறார்கள் யாழ்ப்பாணத்திலிருந்து 8 கிலோ மீற்றர் வடக்கே அமைந்துள்ள தெல்லிப்பளை கிராமம் 21 வருடற்களாக உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தின்கட்டுப்பாட்டிலிருந்து இன்று மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் . 21 வருடற்களாக தாய் நிலத்தின் சுவாசக்காற்றை சுவாசிக்காத மக்கள் அலைகடல் போல் திரண்டு செல்கின்றனர்
இயந்திரப்பறவைகள் போட்ட குண்டுகளால் சிதைந்து போன சிதைந்து போன வீடுகளும் ஓங்கி வளர்ந்த மரக்கூட்டத்தையும் தவிர வேறு  எதுவும் இல்லை.யாழ்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் பனக்கூட்டங்களும் வீடுகளின்
எஜமானாய் வரவேற்க காத்திருக்கும் பாம்புகளின் ஆவலையும் கான முடியும் .
மிதி வெடிகள் முழுமையாக அகற்றப்படாமல் கால்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
தேர்தல் காலம் வந்ததும் வாக்குகளை பெறுவதற்காக உதவி என்ற பெயரிலே வாக்கு கேட்கும் வேட்பாளர் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது .
இவர்களுக்கு இவ்வாறு சின்ன சின்ன உதவிகள் தேவையில்லை. 21 வருடம் அகதி முகாம்களில் வாடனை வீடுகளில் வாழ்ந்த மக்கள் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் இவர்கள் அலைந்து திரிந்து ஓய்ந்த நிலையில் நிம்மதியான வாழ்வை வாழ வழி செய்யுங்கள்.

 

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons