Thursday, January 12, 2012

தேர்தலுக்கான மீள்குடியேற்றம்

வடக்கில் 15 வருடங்களுக்கு முன்னர்  இடம்பெற்ற யுத்தத்தினால் இடம்பெயர்;ந்த நாகர்கோவில் மக்கள் கடந்த உள்ளராட்சி தேர்தல் முன்னிட்டு தமது சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சொந்தஇடங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் சிலரின் அனுபவங்கள் சிலவற்றை அறிந்து கொள்வதற்காக அக்கிராமத்திற்கு சென்றிருந்தோம். அக்கிராமத்தை சென்றடையும் போது மனதில் பல காட்சிகள் தோன்றின. தகரத்தினால் வேயப்பட்ட சின்னஞ்சிறிய குடிசைகள் ஆங்காங்கே  தென்பட்டன. எங்கும் கண்ணிவெடி அபாயம் என்ற பதாகைகளை தான் காணமுடிந்தது.
     தொடர்ந்து பல குடிசைகளைத் தாண்டிச்சென்ற போது கடற்தொழிலாளியான இமானவேல் என்பவரது அறிமுகம் கிடைத்தது. அக்கிராமம் பற்றிய விடயங்களை அவர் அதிகமாகவே அறிந்திருக்கிறார். 1996 ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வின் பின் கடந்த ஆனி மாதம் 23ம் திகதி இக்கிராமத்தில் 90 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டன 30 குடும்பங்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது; என்றும் அவர் குறிப்பிட்டார். இம் மக்களுக்கு ;சோபா நிறுவனம் பல உதவிகளை வழங்கிய போதும் தமது அடிப்படைத்தேவைகள் 06 மாத காலமாகியும் பூர்த்தி செய்யப்படவில்லை; ஆரம்ப கட்டமாக குடிநீர்வசதி, மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. என அவர் தெரிவித்தார்.                     தொடர்ந்து குடும்பப்பெண்ணான செல்வமாலினி என்பவரை சந்தித்தோம். எமது கேள்விகளுக்கு சலித்துக்கொள்ளாமல்  பதி;ல் கூறத்தொடங்கினார்.  எனக்கு இரண்டு குழந்தைகள் எனது கணவர் முச்சக்கரவண்டி சாரதியாக இருக்கிறார். ஒரு நாள் வருமானம் 600 ரூபா எமக்கு இந்த வருமானம் போதாது உள்ளது. உலர் உணவு என்பது இது வரைக்கும் கிடைக்கவும் இல்லை மிகுந்த சிரமத்தைஎதிர்நோக்குவதாக வும் கூறினார்.      
15வருடங்களுக்கு முன் பிருந்த சொந்தங்கள்; மீண்டும் கிடைக்குமா? என்றார் கணேசலிங்கம். நாம் இங்கு வந்த 05 மாத காலங்கள் இது வரைக்கும் 12 தகரங்களுடன் அரைவீட்டுத்திட்டம் கிடைத்திருக்கின்றது. அகதி முகாம்களில் நெருக்கமான குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் இருந்து பல சவால்களை எதிர்நோக்கிய நாம் சொந்த மண்ணில் குடிசை போட்டு வாழ்ந்தால் கூட நிம்மதியுடன் வாழலாம் எம் மண்ணில் கால் பதித்த போது என் பழைய கால நினைவுகன் மீண்டும் திரும்பின ஒன்றாய் மாலை வேளையில் கூடியிருந்து கதை பேசியது எனகென்று ஒரு நண்பர் கூட்டம் சொந்தங்களின் கொண்டாட்டங்கள் மீண்டும் கிடைக்குமா அந்த நிலாக்கால நினைவுகள் என வருத்தத்துடன் கூறினார்.
      நாம் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார் கனகேந்திரன். எமது கிராமத்தில் கண்ணிவெடிகள் முழுமை யாக அகற்றப்படவில்லை முதலில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும் கால்களை எடுத்து வைக்கும் போது பயத்தினை உணர்கின்றேன் குப்பைகளை கொழுத்தி விட்டு தூரத்தில் சென்று நிற்கவேண்டி உள்ளது. 1996  ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்று இறுதிக்கட்ட வன்னியுத்தத்தில் சொந்தங்களை இழந்து தனியாக வாழ்ந்து வருகின்றேன். என்று கூறும் போது அவரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிந்தது.       சொந்த மண்ணில் காடுகளிற்கும் பற்றைகளுக்கு நடுவில்; கண்ணிவெடிகள் மத்தியில் மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் சிரமங்கள் வெளி உலகிற்கு தெரியாது. போரின் போதும் அகதி வாழ்விலும் பட்ட சிரமங்களைவிட இவை மோசமானவை அத்தியஅவசிய பொருட்களை வாங்கு வதற்கு பருத்தித்துறை சந்தைக்கு ஒருநாள் பயணம். வடக்கில் ஏற்பட்ட யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட கிராமங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மக்கள் விடப்பட்ட நிலையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.ம் 12தகரங்கள் கொடுக் கப்பட்டு அரைவீட்டுத்திட்டம் கிடை த்திருக்கின்றது. அகதி முகாம்களில் நெருக்கமான குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் இருந்து பல சவால்களை எதிர்நோக்கிய நாம் சொந்த மண்ணில் குடிசை போட்டு வாழ்ந்தால் கூட நிம்மதியுடன் வாழலாம் எம் மண்ணில் கால் பதித்த போது என் பழைய கால நினைவுகன் மீண்டும் திரும்பின ஒன்றாய் மாலை வேளையில் கூடியிருந்து கதை பேசியது எனகென்று ஒரு நண்பர் கூட்டம் சொந்தங்களின் கொண்டாட்டங்கள் மீண்டும் கிடைக்குமா அந்த நிலாக்கால நினைவுகள் என வருத்தத்துடன் கூறினார்.
      நாம் வாழ்வதற்கான சூழலை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்றார் கனகேந்திரன். எமது கிராமத்தில் கண்ணிவெடிகள் முழுமை யாக அகற்றப்படவில்லை முதலில் கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும் கால்களை எடுத்து வைக்கும் போது பயத்தினை உணர்கின்றேன் குப்பைகளை கொழுத்தி விட்டு தூரத்தில் சென்று நிற்கவேண்டி உள்ளது. 1996  ம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து சென்று இறுதிக்கட்ட வன்னியுத்தத்தில் சொந்தங்களை இழந்து தனியாக வாழ்ந்து வருகின்றேன். என்று கூறும் போது அவரது உணர்வுகளை புரிந்து கொள்ளமுடிந்தது.       சொந்த மண்ணில் காடு களிற்கும் பற்றைகளுக்கு நடுவில்; கண்ணிவெடிகள் மத்தியில் மீள்குடியே ற்றம் என்ற பெயரில் அவர்கள் படும் சிரமங்கள் வெளி உலகிற்கு தெரியாது. போரின் போதும் அகதி வாழ்விலும் பட்ட சிரமங்களைவிட இவை மோசமானவை அத்தியஅவசிய பொருட்களை வாங்கு வதற்கு பருத்தித்துறை சந்தைக்கு ஒருநாள் பயணம். வடக்கில் ஏற்பட்ட யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட கிராமங்கள் உயர்பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்து மீள்குடியேற்றத்திற்காக மக்கள் விடப்பட்ட நிலையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons