பொருளாதாரம் , கல்வி , தொழிநுட்பம் என பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி கண்டுவருகின்ற மாநகரமே சென்னை. இது தழிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தபோதும் இவ்வளர்ச்சிக்கு கரும்புள்ளியாக இடையிடையே காணப்படும் சேரிகள்.
சமூதாயத்தில் தாழ்த்தப்பட்ட மக்களாக கவனிப்பவரற்றவர்களாக பல தரப்பட்ட சேரிப்புறமக்கள் வாழ்ந்துவருகின்றனர். அவர்களது ஒருநாள் வாழ்வு ஒரு யுகம் போன்று கழிந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில் கூவையாறு ,நெடுஞ்செழியன், அயோத்தியநகர், பல்லவநகர் இந்த மாதிரி பலசேரிப்புறங்கள் உள்ளன. இந்த சேரிப்புறங்களில் வாழும் மக்கள் அடிப்படைத்தேவைகளாக உணவு, உடை, உறையுள் என்பவற்றை தினமும் அனுபவிப்பது சிரமானதே என்றே கூறலாம். குப்பைகூழங்களை கொட்டுவதால் ஒரே இடத்தில் தேங்கிநி;ன்று துர்நாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. கூவங்களை இக்கழிவுநீர் சென்றடைவதால் கூவம் ஆறு மாசடைந்து காணப்படுகின்றது. ஏறத்தாழ 50 வருடங்களுக்கு முன்னர் மிகவும் சுத்தமாக காணப்பட்ட இந்த ஆறுகள் இப்பொழுது கவனிப்பரற்று அனைத்துக்கழிவுகளையும் தன்னுள் உள்ளடக்கி அசுத்தமாக காட்சியளிக்கின்றது.
ஓவ்வொரு சேரிப்புறங்களும் மிகவும் சிறியது அதற்குள் பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏதோ ஒரு எதிர்பார்ப்பிலே வாழும் அந்த மக்களில் பெரும்பாலும் பெண்களே தமது அன்றாடத்தேவைக்களுக்காக வெட்டப்பட்ட ஆடுகளின் கால்களினை எடுத்து அதில் உள்ள மயிர்களை அகற்றி அதனை நெருப்பில் சுட்டு விற்கிறார்கள். இதன்மூலம் நாளில் 200 ரூபா கிடைக்கின்றது. அந்தப்பணத்தில் தமது அன்றாடத்தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள் சேரிப்புறப்பெண்கள்.
ஓவ்வொரு சேரிப்புறங்களிலும் 150 க்கு மேற்ப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்துவருகின்றனர். தேர்தல் காலங்களில் மட்டும் தேவைப்படும் அந்த மக்கள் மற்றைய காலங்களில் அரசாங்கத்திற்கு எதிரிகளாக காணப்படுகின்றனர். ஒரு பார்வையில் பரிதாபத்தை ஏற்படுத்தினாலும் மறுபார்வையில் போலிவாழ்க்கையை நடத்;துகின்றனர் சேரிப்புறமக்கள். வேலை இன்றி வெட்டியாக இருக்கும் சில ஆண்கள் என இயல்பற்;ற சமூகம் பழியை அரசு மீது சாடும் நியாயமற்ற மனிதர்கள் தான் இவர்கள்.
பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள், கோயில்கள், பல்கலைக்கழகங்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது சிங்காரச்சென்னை. இதன் மறு பக்கமாக சேரிப்புறங்கள் இந்த சேரிகளில் வாழும் மக்கள் உண்மையில் வாழுகின்றனர் என்று கூறமுடியாது வாழப்போராடுகிறார்கள் என்பதே குறிக்கோளாகும்.



11:32 PM
உறவுகள்


0 comments:
Post a Comment