Tuesday, March 20, 2012

பேஸ்புக் காதல் தீவிரம்

சமூக தொடர்பாடல் என்பது எல்லாக்காலங்களிலும் புதிய வசதிகளையும்- தொழில்நுட்ப மாற்றங்களையும் இலகுவாக தன்னுள் உள்வாங்கி அதன் உச்சக்கட்ட பயனை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அது, அரசர் காலத்தில் புறாவினூடு ஓலைகளை அனுப்பியதிலிருந்து இன்று சில கணத்தில் எஸ்.எஸ்.எம் மின்னஞ்சல் என்கிற அதிகவேக தொடர்பாடல் நுட்பங்களாக வளர்ச்சி பெற்றிருக்கிற வடிவங்களினூடும் இந்த தொடர்பாடலின் புதிய நுட்பங்களை காதலும் தனக்கு ஏற்ற விதத்தில் எல்லாக்காலங்களிலும் பயன்படுத்தி வந்திருக்கிறது. சமூக தொடர்பாடல் இல்லை என்றால் காதலின் தோற்றம் அவ்வளவுக்கு சாத்தியமாகிவிட்டது. சமூக தொடர்பாடலே காதலின் மூலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் கையெழுத்து கடிதங்களினூடு பரிமாறப்பட்ட காதல் இன்று இணைய அரட்டை, மின்னஞ்சல்கள். குறுஞ்செய்திகளோடு இலகுபடுத்தப்பட்ட வழிகளில் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. நவீன தொடர்பாடல் நுட்பங்களில் இருக்கின்ற வேகமளவுக்கு அபாயங்களும் சேர்ந்தே இருக்கின்றன. வேகமான உலகில் வேகத்தை விரும்பும் பலர் அதற்குள் இருக்கின்ற அபாய எச்சரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. அதுவே பல சிக்கல்களுக்குள் கொண்டு சேர்த்து விடுகின்றது.
பேஸ்புக் காதலினால் காதலி தற்கொலை. காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியதால் பெண்ணின் பெற்றோர் தற்கொலை. அரட்டை- மின்னஞ்சல் ஆதாரங்களை வைத்துக்கொண்டு காதலியையோ- காதலனையோ பலாத்காரம் செய்து ஆதாரங்களை வெளியிடாமல் இருக்க பெருந்தொகைப்பணத்தை கப்பமாக கோரியது இணையதிருட்டுக்கும்பல். இப்படியான செய்திகளை நாளாந்தம் ஊடகங்களில் காணக்கூடியவாறு உள்ளது.
மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் நட்பு ரீதியிலான குறிப்பிட்டளவிலான பேஸ்புக், ஸ்கைப் வடிவங்களினூடான இணைய அரட்டை இறுதியில் காதல் நிலையை எட்டுகிறது.இந்த இடத்தினை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆர்வமும் ஆசையும் தொற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் காதலையும் காதல் மொழிகளையும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
 பெண்ணிடத்திலோ- ஆணிடத்திலோ நேரடியாக காதலை சொல்ல பெருமளவானோருக்கு தயக்கமே. இந்த தயக்கத்தினாலே சொல்லப்படாமல் போன காதல்கள் மில்லியன் கணக்கில் இருக்கலாம். நேடியாக காதலை சொல்ல முடியாதவர்களுக்கு கொஞ்சம் திடத்தை வழங்கி காதலை சொல்ல வைத்தவை குறுந்தகவல்களும் இணைய அரட்டைகளும் சமூகதளங்களின் ஊட பகிரப்படும் தரவிறக்கங்களும் செய்திகளும் ஒரு குறிப்பிட்ட  நபரை நோக்கி மறைமுகமாக தங்களின் ஆர்வத்தை சொல்லி எதிர்தரப்பிடமிருந்து வருகின்ற எதிர்விளைவுகளுக்கு ஏற்ப தங்களின் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். இந்த அடுத்த கட்டத்திலும் இணையமே அதிகம் இருக்கின்றது.

பெண்களின் ஊடகப்பங்களிப்பு

ஏனைய துறைகளைப்போலவே ஊடகமும் தற்காலத்தில் உயரியவளர்ச்சியைப்பெற்றுள்ளது. இதில் பெண்களின் ஊடகப்பங்கேற்பு என்பது காலம் காலமாக கேள்விக்குறியாக்கப்பட்டு வந்துள்ளதோடு அது ஆண்களுக்கு மட்டுமான குறித்து ஒதுக்கப்பட்ட துறையாகவும் ஆணாதிக்க செல்வாக்கை கட்டியெழுப்பியும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் அனேக பாகங்களில் ஊடக வாழ்க்கையை ஆண்களே தம் வசம் வைத்துள்ளனர். விதி விலக்காக சில பெண்களால் மட்டுமே ஆணாதிக்கம் நிறைந்த சில துறைகளில் சாதிக்கமுடிந்துள்ளது.
ஊடகம் என்பது பொதுமக்கள் பிரச்சனைகளை துணிவாகவும் உரிமையுடனும் தட்டிக்கேட்கும் உரிமை கொள்ளல் எனப்படுகிறது. அவ்வாறான உரிமை ஆண்கள் ஆதிக்கம் தான் தட்டிக்கேட்கவேண்டும். பெண்கள் தட்டிக்கேட்டால் பால் சமத்துவ நிலையைக்காட்டி மிரட்டிவிடுகின்றனர். அரசியல் வாதிகளுடன் ஆண் ஊடகவியலாளர்கள் மோதினால் உயிருக்கு ஆபத்து என்பார்கள் அதே வேளை ஒரு பெண் ஊடகவியலாளர் மோதினால் பெண்மைக்கு இழிவாக பேசுவார்கள். இவ்வாறான பால்வேறுபாடு ஏன்? அரசியலில் ஆண்களை விட பெண்கள் முன்நிலையில் நிற்கிறார் இந்த மாதிரி ஊடுகத்திலும் பெண்களுக்கு சமபங்கேற்பு கிடைக்கவேண்டும்.
பல ஊடக நிறுவனங்களில் பொது விடயம் சார்ந்த பிரச்சனைகளை ஆண்களிடம் தான் ஒப்படைப்பார்கள். அதே பிரச்சனைகளை பெண்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆண்களுடன் பெண்களும் சம பங்கேற்பு ஊடகத்தில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லை எனில் ஊடகத்தை பெண்கள் ஏன் கற்கவேண்டும். பாரம்பரியமாகவே ஆண்களின் ஆதிக்கமானது பெண்களின் நடமாட்டத்தையும் பங்குபற்றலையும் கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் பல்வேறுபட்ட உபாயங்களையும் வழிமுறைகளையும் பிரயோகித்து வந்துள்ளது.
மேற்கூறப்பட்ட பிண்ணனியில் ஊடகங்களில் பெண்கள் இல்லாதிருப்பதுடன் பெண்களின் பிரச்சனைகள் தொடர்பான கவனிப்பும் குறைவாகவே உள்ளமை தெளிவாகும். எனினும் பரந்த அணுகுமுறைகளுக்கமைய பெண்கள் வித்தியாசமான முறையில் ஊடகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பெண்கள் தனிமையாக அல்லது குழுக்களாக தமக்கு இயல்பான வகையில் ஊடகத்தளம் சார்ந்து செயற்படுகின்றனர். ஆணாதிக்கம் தழுவிய கருத்தியலை உள்வாங்கிக்கொண்ட ஆண்ஊடகவியலாளர்கள் சமூகத்தை கருத்தில் கொள்வதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்ஊடகவியலாளர்கள் தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் ஊடகங்களில் பெண்களின் தலைமைத்துவம் என்பதோ, பங்குபற்றல் என்பதோ முற்றிலும் பெண்நிலை சார்ந்த விடயமாக இடம்பெறுவதில்லை. அவ்வாறின்றிப் பெண்கள் தமது சுய திறமையாலும் தன்னாற்றல் மூலமும் இயல்பான ஊடகப்பிரவேசம் செய்வதென்பது முதன்மையாக காணப்படுகின்றது. ஊடகத்தளத்தில் அப்பால் ஏனைய நிர்வாகத்துறைகளிலும் இலங்கையில் பெண்களின் நியமனம் விதந்துரைக்கப்படுகின்றது.
இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபன பெண்ஊடக அறிவிப்பாளர்கள் திருமதி. இராஜேஸ்வரி சண்முகம் முதலான பெண் அறிவிப்பாளகள் பல தரப்பட்டவர்கள் இப்போதும் காணப்படுகின்றனர்.

Sunday, March 4, 2012

வெள்ளை மாளிகையில் அல்லி ராஜ்ஜியம்

வெள்ளை மாளிகையில் அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார் ஒபாமா மனைவி மிஷெல் என்று அமெரிக்கா பத்திரிகையாளர் ஒருவர் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்கா அதிபர் ஓபாமாவின் மனைவி மிஷெல் எளிமையானவராகவும் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராகவும் இருப்பர். ஆனால் அவரது இன்னொரு முகத்தை பலரும் அறியமாட்டார்கள். அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் வேலை பார்க்கும் அதிகாரிகளை கேட்டால் அந்த முகத்தை தெரிந்து கொள்ளலாம்.
இப்படி ஆரம்பித்து அவரைப்பற்றியும் ஒபாமாவைப்பற்றியும் பல்வேறு தகவல்களை ஒரு புத்தகமாக எழுதியுளளார் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் நிருபர் ஜோடிகன்டார். இன்று வெளியாகியுள்ள தி ஒபாமாஸ் என்ற அந்தப்பகுதிகளை பெற்று ஏ.பி நியூஸ் ஏஜென்ஸி வெளியிட்டுள்ளது. அதில் மிஷெல் பார்ப்பதற்கு மிகவும் மென்மையானவராக இருந்தாலும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை ஆட்டிப்படைக்கிறார் என்று கூறி சில சம்பவங்களையும் குறிப்பிட்டிக்கிறார்.
மேலும் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி இமானுவேல். அதிபரின் முன்னாள் ஆலோசகர் ரொபர்ட் கிப்ஸ் ஆகியோருடன் மிஷெல் மோதிய சம்பவங்களை குறிப்பிட்டிருக்கிறார். கடந்த ஆண்டில் மருத்துவக்காப்பீடு திட்ட மசோதாவை ஒபாமா கொண்டு வந்த போது அதற்கு எதிர்ப்பான கருத்து வெளியாயின. அந்தத்திட்டக்கொள்கைகளை சரியாக கவனிக்கவில்லை. என்று இமானுவேலிடம் கடுமையாக சண்டை போட்டிருக்கிறார் மிஷெல். இதனால் மனம் நொந்த இமானுவேல் இராஜிநாமா செய்திருக்கிறார். ஆனால் அதை ஒபாமா  ஏற்றுக்கொள்ளவில்லை.இன்னொரு சமயம் அதிபரின் உதவியாளர்கள் யாருமே சரியில்லை வெள்ளை மாளிகையில் புது டீம் கொண்டு வர வேண்டும் என்று மிஷெல் திட்டியிருக்கிறார்.
ஒரு முறை பிரான்ஸ் அதிபரின் மனைவி கர்லா புருனி சர்கோஸ் வந்த போது அவரிடம் மிசெஷல் வெள்ளை மாளிகையில் வேலை பார்ப்பவர்கள் யாருமே சரியில்லை. இங்கு வசிப்பது நரகம் போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதனால் கிப்ஸ் கடும் கோபமடைந்திருக்கிறார். இது போலே பல சம்பவங்கள் குறிப்பிட்டுள்ள நிருபர் கன்டார். இது பற்றி ஒபாமா மற்றும் மிஷெலிடம் கருத்து கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர். இந் நிலையில் புத்தகம் குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில் சாதரணமாக நடந்த விடயங்களை மிகைப்படுத்தியும் கற்பனைகளை சேர்த்தும் எழுதியுள்ளார் என்று தெரிவித்தார்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons