சமூக தொடர்பாடல் என்பது எல்லாக்காலங்களிலும் புதிய வசதிகளையும்- தொழில்நுட்ப மாற்றங்களையும் இலகுவாக தன்னுள் உள்வாங்கி அதன் உச்சக்கட்ட பயனை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அது, அரசர் காலத்தில் புறாவினூடு ஓலைகளை அனுப்பியதிலிருந்து இன்று சில கணத்தில் எஸ்.எஸ்.எம் மின்னஞ்சல் என்கிற அதிகவேக தொடர்பாடல் நுட்பங்களாக வளர்ச்சி பெற்றிருக்கிற வடிவங்களினூடும் இந்த தொடர்பாடலின் புதிய நுட்பங்களை காதலும் தனக்கு ஏற்ற விதத்தில் எல்லாக்காலங்களிலும் பயன்படுத்தி வந்திருக்கிறது. சமூக தொடர்பாடல் இல்லை என்றால் காதலின் தோற்றம் அவ்வளவுக்கு சாத்தியமாகிவிட்டது. சமூக தொடர்பாடலே காதலின் மூலங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.
இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் கையெழுத்து கடிதங்களினூடு பரிமாறப்பட்ட காதல் இன்று இணைய அரட்டை, மின்னஞ்சல்கள். குறுஞ்செய்திகளோடு இலகுபடுத்தப்பட்ட வழிகளில் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. நவீன தொடர்பாடல் நுட்பங்களில் இருக்கின்ற வேகமளவுக்கு அபாயங்களும் சேர்ந்தே இருக்கின்றன. வேகமான உலகில் வேகத்தை விரும்பும் பலர் அதற்குள் இருக்கின்ற அபாய எச்சரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. அதுவே பல சிக்கல்களுக்குள் கொண்டு சேர்த்து விடுகின்றது.
பேஸ்புக் காதலினால் காதலி தற்கொலை. காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியதால் பெண்ணின் பெற்றோர் தற்கொலை. அரட்டை- மின்னஞ்சல் ஆதாரங்களை வைத்துக்கொண்டு காதலியையோ- காதலனையோ பலாத்காரம் செய்து ஆதாரங்களை வெளியிடாமல் இருக்க பெருந்தொகைப்பணத்தை கப்பமாக கோரியது இணையதிருட்டுக்கும்பல். இப்படியான செய்திகளை நாளாந்தம் ஊடகங்களில் காணக்கூடியவாறு உள்ளது.
மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் நட்பு ரீதியிலான குறிப்பிட்டளவிலான பேஸ்புக், ஸ்கைப் வடிவங்களினூடான இணைய அரட்டை இறுதியில் காதல் நிலையை எட்டுகிறது.இந்த இடத்தினை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆர்வமும் ஆசையும் தொற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் காதலையும் காதல் மொழிகளையும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
பெண்ணிடத்திலோ- ஆணிடத்திலோ நேரடியாக காதலை சொல்ல பெருமளவானோருக்கு தயக்கமே. இந்த தயக்கத்தினாலே சொல்லப்படாமல் போன காதல்கள் மில்லியன் கணக்கில் இருக்கலாம். நேடியாக காதலை சொல்ல முடியாதவர்களுக்கு கொஞ்சம் திடத்தை வழங்கி காதலை சொல்ல வைத்தவை குறுந்தகவல்களும் இணைய அரட்டைகளும் சமூகதளங்களின் ஊட பகிரப்படும் தரவிறக்கங்களும் செய்திகளும் ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கி மறைமுகமாக தங்களின் ஆர்வத்தை சொல்லி எதிர்தரப்பிடமிருந்து வருகின்ற எதிர்விளைவுகளுக்கு ஏற்ப தங்களின் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். இந்த அடுத்த கட்டத்திலும் இணையமே அதிகம் இருக்கின்றது.
இற்றைக்கு 20 வருடங்களுக்கு முன்னர் கையெழுத்து கடிதங்களினூடு பரிமாறப்பட்ட காதல் இன்று இணைய அரட்டை, மின்னஞ்சல்கள். குறுஞ்செய்திகளோடு இலகுபடுத்தப்பட்ட வழிகளில் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. நவீன தொடர்பாடல் நுட்பங்களில் இருக்கின்ற வேகமளவுக்கு அபாயங்களும் சேர்ந்தே இருக்கின்றன. வேகமான உலகில் வேகத்தை விரும்பும் பலர் அதற்குள் இருக்கின்ற அபாய எச்சரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. அதுவே பல சிக்கல்களுக்குள் கொண்டு சேர்த்து விடுகின்றது.
பேஸ்புக் காதலினால் காதலி தற்கொலை. காதலனுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியதால் பெண்ணின் பெற்றோர் தற்கொலை. அரட்டை- மின்னஞ்சல் ஆதாரங்களை வைத்துக்கொண்டு காதலியையோ- காதலனையோ பலாத்காரம் செய்து ஆதாரங்களை வெளியிடாமல் இருக்க பெருந்தொகைப்பணத்தை கப்பமாக கோரியது இணையதிருட்டுக்கும்பல். இப்படியான செய்திகளை நாளாந்தம் ஊடகங்களில் காணக்கூடியவாறு உள்ளது.
மெல்ல மெல்ல ஆரம்பிக்கும் நட்பு ரீதியிலான குறிப்பிட்டளவிலான பேஸ்புக், ஸ்கைப் வடிவங்களினூடான இணைய அரட்டை இறுதியில் காதல் நிலையை எட்டுகிறது.இந்த இடத்தினை பலரும் புரிந்து கொள்வதில்லை. ஆர்வமும் ஆசையும் தொற்றிக்கொண்டிருக்கின்ற நிலையில் காதலையும் காதல் மொழிகளையும் பேசிக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
பெண்ணிடத்திலோ- ஆணிடத்திலோ நேரடியாக காதலை சொல்ல பெருமளவானோருக்கு தயக்கமே. இந்த தயக்கத்தினாலே சொல்லப்படாமல் போன காதல்கள் மில்லியன் கணக்கில் இருக்கலாம். நேடியாக காதலை சொல்ல முடியாதவர்களுக்கு கொஞ்சம் திடத்தை வழங்கி காதலை சொல்ல வைத்தவை குறுந்தகவல்களும் இணைய அரட்டைகளும் சமூகதளங்களின் ஊட பகிரப்படும் தரவிறக்கங்களும் செய்திகளும் ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கி மறைமுகமாக தங்களின் ஆர்வத்தை சொல்லி எதிர்தரப்பிடமிருந்து வருகின்ற எதிர்விளைவுகளுக்கு ஏற்ப தங்களின் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றனர். இந்த அடுத்த கட்டத்திலும் இணையமே அதிகம் இருக்கின்றது.



12:39 AM
உறவுகள்


0 comments:
Post a Comment