Tuesday, March 20, 2012

பெண்களின் ஊடகப்பங்களிப்பு

ஏனைய துறைகளைப்போலவே ஊடகமும் தற்காலத்தில் உயரியவளர்ச்சியைப்பெற்றுள்ளது. இதில் பெண்களின் ஊடகப்பங்கேற்பு என்பது காலம் காலமாக கேள்விக்குறியாக்கப்பட்டு வந்துள்ளதோடு அது ஆண்களுக்கு மட்டுமான குறித்து ஒதுக்கப்பட்ட துறையாகவும் ஆணாதிக்க செல்வாக்கை கட்டியெழுப்பியும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகின் அனேக பாகங்களில் ஊடக வாழ்க்கையை ஆண்களே தம் வசம் வைத்துள்ளனர். விதி விலக்காக சில பெண்களால் மட்டுமே ஆணாதிக்கம் நிறைந்த சில துறைகளில் சாதிக்கமுடிந்துள்ளது.
ஊடகம் என்பது பொதுமக்கள் பிரச்சனைகளை துணிவாகவும் உரிமையுடனும் தட்டிக்கேட்கும் உரிமை கொள்ளல் எனப்படுகிறது. அவ்வாறான உரிமை ஆண்கள் ஆதிக்கம் தான் தட்டிக்கேட்கவேண்டும். பெண்கள் தட்டிக்கேட்டால் பால் சமத்துவ நிலையைக்காட்டி மிரட்டிவிடுகின்றனர். அரசியல் வாதிகளுடன் ஆண் ஊடகவியலாளர்கள் மோதினால் உயிருக்கு ஆபத்து என்பார்கள் அதே வேளை ஒரு பெண் ஊடகவியலாளர் மோதினால் பெண்மைக்கு இழிவாக பேசுவார்கள். இவ்வாறான பால்வேறுபாடு ஏன்? அரசியலில் ஆண்களை விட பெண்கள் முன்நிலையில் நிற்கிறார் இந்த மாதிரி ஊடுகத்திலும் பெண்களுக்கு சமபங்கேற்பு கிடைக்கவேண்டும்.
பல ஊடக நிறுவனங்களில் பொது விடயம் சார்ந்த பிரச்சனைகளை ஆண்களிடம் தான் ஒப்படைப்பார்கள். அதே பிரச்சனைகளை பெண்கள் செய்ய மாட்டார்கள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆண்களுடன் பெண்களும் சம பங்கேற்பு ஊடகத்தில் இருக்கவேண்டும். அவ்வாறு இல்லை எனில் ஊடகத்தை பெண்கள் ஏன் கற்கவேண்டும். பாரம்பரியமாகவே ஆண்களின் ஆதிக்கமானது பெண்களின் நடமாட்டத்தையும் பங்குபற்றலையும் கட்டுப்படுத்தவும் ஒடுக்கவும் பல்வேறுபட்ட உபாயங்களையும் வழிமுறைகளையும் பிரயோகித்து வந்துள்ளது.
மேற்கூறப்பட்ட பிண்ணனியில் ஊடகங்களில் பெண்கள் இல்லாதிருப்பதுடன் பெண்களின் பிரச்சனைகள் தொடர்பான கவனிப்பும் குறைவாகவே உள்ளமை தெளிவாகும். எனினும் பரந்த அணுகுமுறைகளுக்கமைய பெண்கள் வித்தியாசமான முறையில் ஊடகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பெண்கள் தனிமையாக அல்லது குழுக்களாக தமக்கு இயல்பான வகையில் ஊடகத்தளம் சார்ந்து செயற்படுகின்றனர். ஆணாதிக்கம் தழுவிய கருத்தியலை உள்வாங்கிக்கொண்ட ஆண்ஊடகவியலாளர்கள் சமூகத்தை கருத்தில் கொள்வதில்லை. ஐரோப்பிய நாடுகளில் பெண்ஊடகவியலாளர்கள் தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தி வருகின்றனர். எவ்வாறாயினும் ஊடகங்களில் பெண்களின் தலைமைத்துவம் என்பதோ, பங்குபற்றல் என்பதோ முற்றிலும் பெண்நிலை சார்ந்த விடயமாக இடம்பெறுவதில்லை. அவ்வாறின்றிப் பெண்கள் தமது சுய திறமையாலும் தன்னாற்றல் மூலமும் இயல்பான ஊடகப்பிரவேசம் செய்வதென்பது முதன்மையாக காணப்படுகின்றது. ஊடகத்தளத்தில் அப்பால் ஏனைய நிர்வாகத்துறைகளிலும் இலங்கையில் பெண்களின் நியமனம் விதந்துரைக்கப்படுகின்றது.
இலங்கை ஒலி பரப்புக்கூட்டுத்தாபன பெண்ஊடக அறிவிப்பாளர்கள் திருமதி. இராஜேஸ்வரி சண்முகம் முதலான பெண் அறிவிப்பாளகள் பல தரப்பட்டவர்கள் இப்போதும் காணப்படுகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons