Friday, January 13, 2012

மாவிட்டபுரம் ஒரு பார்வை

யாழ்ப்பாணத்தில் வடமேற்குத்திசையில் ஏறத்தாழ 15 கிலோமீற்றர் தொலைவில் மாவிட்டபுரம் அமைந்துள்ளது. அங்கே கோயில் கொண்டருளும் ஆலயம் மாவிட்டபுரக்கந்தசுவாமி ஆலயமாகும். இது மா என்றால் குதிரைமுகம் நீங்கிய தலம் என்றும் கி.பி 07ம் நூற்றாண்டில் இந்தியதிசையுக்கிய சற்சன சோழப்பெருமன்னனின் மகள் மாருதப்புரவீகவல்லியின் குதிரைமுகம் நீங்கிய தலமே மாவிட்டபுரம்.
அரச குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து தேடிவந்து தரிசித்தனர் என்பதானாலும், மாருதப்புரவீகவல்லியின் கொடிநோய் நிங்கியதனாலும் நன்றிக்கடனாக இக்கோயிலைக்கட்டினார் என்றும் வரலாற்றுரீதியாகவும், வைபரீதியாகவும் கூறப்படுகிறது.
இத்தலத்தின் கட்டிடங்களும், சிற்பங்களும் மிகவும் பழமைவாய்ந்தாக காணப்பட்டது என்றும் 1990ம் ஆண்டில் வடக்கில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இடிக்கப்பட்டது என்றும் தற்போது அதன் வேலைகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருப்பதாகவும் இன்னும் 03 மாதகாலங்களில் அனைத்து சிலைகளும் நிறைவடைந்துவிடும் என்றும் ஆலயப்பரிபாலசபையினரான ஆனந்தயோகேந்திரன் தெரிவித்தார்.
மாவிட்டபுர மகோற்சவக்காலம் ஆடியில் இடம்பெறும்.15 வது தினமாகிய ஆடிஅமாவாசை அன்று முருகன் திருவுலாச்சென்றருளி மாவிட்டபுரத்தில் இருந்து 05 கிலோமீற்றர்தூரத்தில் உள்ள கீரிமலை புனித தலத்தில் தீர்த்தஉற்சவம் நடைபெறும். யாழ்ப்பாணக்குடாநாட்டில் இறைபதம் அடைந்தவர்களின் அஸ்தி எனப்படுகின்ற திதி செய்யப்படுதல் இந்தத்தீர்த்தத்தில் ஆகம். அதுவே ஆடிஅமாவாசை சிறப்புமிக்க விரதமாகும். தினந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்புப்பூசைகள் இடம்பெற்று வருகின்றன.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons