Friday, May 4, 2012

பெண்கள் எதிர்கால கணவனுடன் எதையும் மனம் விட்டுப்பேசமுடியுமா?

பெண்கள் பலர் மனப்பாரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதில் திருமணமான பெண்கள் பல சுமைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
பெண்கள் எல்லோரும் காதலிக்கிறார்கள் என்று கூறமுடியாது அவ்வாறு காதலித்தாலும் 50 மூ மட்டும் திருமணபந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள். திருமணத்தின் இணையும் ஒரு பெண் தனது கணவருக்கு தனது பழைய கால வாழ்க்கையை  கூறவேண்டுமா?   என்ற  போராட்டம் வாழ்க்கை முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.
கணவன் தனது மனைவியை சந்தேகத்துடன் பார்க்கும் போதெல்லாம் அது தப்பானவையாக இருக்கும். அன்பாக  நேசிக்கும் எந்த ஆண்களும் தனது மனைவி; சரியாவை என்றே தோன்றக்கூடும். ஆண்களின் கடந்த கால வாழ்க்கையை பெண்கள்   சுமைகளாக தாங்கிக்கொள்வார்கள். ஒரு ஆண் தனது கடந்த கால வாழ்க்கையை  தனது மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நிம்மதியாக வாழுகின்றான்.
பெண்ணானவள் குடும்பத்தின் கௌரவம் என்றே எதிர்காலம் ஒப்படைக்கப்படுகிறது. அடிமைத்தனங்களின் திருமணமும் திருமணங்களின் அடிமைத்தனங்களும் பெண்களுக்கு எப்போதும் மறைமுகமாக உள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் காதலித்தால் சமூகத்தால் மட்டுமன்றி பெற்றோர்களால் தள்ளிவைக்கப்படுகின்றார்கள். எந்த வொரு பெண்ணும் திருமணமானதும் தனது கடந்த கால வாழ்க்கையை மறைக்கத்தான் முனைவார்கள். இதில் யார் தவறு செய்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாகவே  உள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons