Monday, May 28, 2012

அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறும் முகாம் மக்கள்

இலங்கை இந்தியன் நாடுகளை பிரிக்கும் எல்லைக்கோடான இயற்கைவளம் நிறைந்த காங்கேசன்தறை பகுதியை அண்மித்துள்ள இடங்களான தையிட்டி, மயிலிட்டி, குரும்பசிட்டி ஆகிய இடங்களை சொந்த இடமாக கொண்ட மக்கள்  1990ம் ஆண்டு வடக்கில் ஏற்பட்ட இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது பிரதேசங்களை விட்டு வெளியேறியுள்ளார்கள். மீன்பிடிப்பு, தச்சுத்தொழில், கால்நடைவளர்ப்பு என வாழ்வதாரத்தொழில்களின் மூலம் தமது வாழ்வதாரத்தை தன்னிறைவாக கொண்டிருந்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் போரின் போதுஅழிக்கமுடியாத சொத்துகளையும், சொந்தங்களையும் விட்டு இடம்பெயர்ந்து வன்னி, வவுனியா என பல பகுதிகளுக்கு சென்று இறுதியாக மல்லாகம் நீதவான் முகாமில் தஞ்சமடைந்து 22 வருடங்களாக அகதி வாழ்க்கையை அனுபவித்து வருகின்றார்கள். அன்று ஆரம்பித்த அகதி முகாம் வாழ்க்கை பல துன்பங்கள், நெருக்கடிகள் என்பவற்றை சந்தித்த வண்ணமும் தமது பிரதேசங்களில் தாம் செய்த வாழ்வதாரத்தொழில்களை இன்று வரையும் செய்து வருகின்றனர்.
அகதி வாழ்வை யாரும் விரும்பமாட்டர்கள் தமது சொந்த மண்ணுக்கு எப்போது மீள்வோம் என்ற எதிர்பார்ப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் காங்கேசன் துறையை அண்டிய பிரதேசங்களான தையிட்டி, மயிலிட்டி, குரும்பசிட்டி, ஊரணி போன்ற பகுதி மக்களும் இடம்பெயர்ந்த பிற்பாடு அவர்களுடைய வாழ்வில் இருள்சுழ்ந்துள்ளது. அடிக்கடி இந்த பிரதேங்களில் யுத்தம் நிகழ்ந்த படியால் மக்களின் சொத்துகள் அளவுக்கதிகாக திருடப்பட்டு சொந்த மண்ணை விட்டு விரட்டப்பட்டு வன்னி பிரதேசங்களுக்கு ஓடிச்சென்று அங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்டதை விட கொடூரமாக பசி, பட்டினி என வாடினார்கள் அங்கு அகதி முகாம் அமைத்துக்கொடுக்கப்படாமையால் இருப்பிடங்களாக சிலர் சொந்தங்களின் வீடுகளிலும், சிலர் வீதிகளிலும் வாழ்ந்தார்கள் அதன் பின்னர் தான் வடக்கின் ஒரு சில பகுதி மக்கள் யுத்தம் முடிவடைந்த நிலையில் விடப்பட்டனர். இந்த மக்களும் தமது சொந்த மண்ணை பார்க்கலாம் என்று வந்துள்ளார்கள் ஆனால் அவர்களின் இடங்கள் விடப்படாத நிலையில் இருந்தமையால் அவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர்.  புபபபபபபபபப நறுவனத்தால் மல்லாகத்தில் நீதவான் முகாம்கள் போடப்பட்டு வாழத்தொடங்கினார்கள்.
இடம்பெயர்ந்த அகதிமுகாம் வாழ்கைக்கு 22 வருடங்களாகியும் அந்த மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படாதநிலை என்று கூறாம். நல்ல முறையில் குடிதண்ணீர்வசதிகள், மலசலகூடவசதிகள் சரியாக பெற்றுத்தரப்படவில்லைஎன மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை நிரந்தரமகா தரப்பட்ட வளம் என்றால் வசிப்பதற்கு ஒரு இடமும், 1 இலட்சம் பெறுமதியான இந்த வீட்டுத்திட்டமும் தான். எமது குழந்தைகள் பாடசாலை செல்வதற்கு ஆரம்பத்தில் உதவிகள் செய்தார்கள் அதன் பின்னர் எந்த உதவிகளும் செய்வதில்லை ஆரம்பத்தில் னு, சு, ஊ யுனிசென், னு, சு, ஊ ஆகிய நிறுவனஙகள் உதவிகளை வழங்கிய போது கொஞ்சம் பொருளதார கஸ்ரங்கள் இல்லாமல் இருந்தது. எங்களுக்கு சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை குழந்தைகள் பசிதாங்க மாட்டர்கள் அவர்களுக்காக நாங்கள் கஸ்ரப்படுகிறோம் எமக்கு எனியும் பொருட்கள் தரும்படி கேட்கவில்லை யுத்தம் நடந்த எல்லாப்பிரதேசங்களையும் மீள்குடியேற்றத்திற்கு விடப்பட்டுள்ளார்கள் எங்களையும் எமது சொந்த இடத்திற்கு விடும்படி தான் நாங்கள் இப்போது கேட்டக்கொள்கின்றொhம். என்று அந்த மக்கள் தெரிவிக்கின்றார்.
குறித்த நீதவான் முகாமில் 65 வீடுகளுடன் 80 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் சிலர் வேறு இடங்களுக்கும் சென்று வாழ்ந்து வருகின்றார்கள். அந்த மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளாக குடிதண்ணீர்பிரச்சனையும், மலசலகூடவசதி இன்மை பிரச்சனையே. மலசலகூடவசதி போதியளவுக்கு இருப்பினும் சகித்துக்கொள்வோம். குடிதண்ணிர் பிரச்சனையை சகித்துகொள்ளமுடியாது இவர்கள் அமைத்துக்கொடுத்த தண்ணீர் குழாயில் வருகின்ற தண்ணீரை எடுத்தக்குடித்தால் நோய்கள் தான்வருகிறது. ( சொறி, சிரங்கு, வாந்திபேதி) அதனால் எமது முகாமை அண்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளியில் உள்ள தண்ணீர் குழாயில் தண்ணீர் எடுத்து வருகிறோhம். என்ன செய்வது நாம் அகதி மக்கள் தானே அனுபவித்து தான் ஆகவேண்டும் என மக்கள் அங்கலாய்க்கின்றார்கள். பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் ஒவ்வொரு நேரங்களிலும் குடிதண்ணீர் போத்தல்களிலும், கான்களிலும், குடங்களிலும் எடுத்துச்செல்லும் காடசியை நாமும் பர்த்திருக்க தவறவில்லை.
முகாம் வாழ்கையை விட எமது மண்ணில் சிறு குடிசை போட்டு வாழ்ந்தாலும் நிம்மதியுடன் வாழாலாம். ஓவ்வொரு நாட்களும் எப்படி போகக்கூடும் என்று உள்ளம் ஏங்கிக்கொண்டிருக்கிறது. குடும்பத்தை பார்ப்பதற்கு வேலைக்கு போகவேண்டும் ஆனால் எமது தொழில் மீன்பிடித்தொழில் மழை, காற்று என்றால் கடலுக்கு போகமுடியாது அதனால் மிகவும் கஸ்ரமாக உள்ளது. ஆரம்பர வாழ்கை நாம் கேட்கவில்லை அடிப்படை வசதிகள் மட்டும் பூர்த்தி செய்து தந்தால் போதும் என்கிறார்கள்.
இந்த முகாமில் வாழுகின்ற பாடசாலை மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றமாக காணப்படுகின்றமையும் அனைத்து மாணவர்களும் மல்லாகம் மகாவி;த்தியாலத்தில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் இவருடைய கருத்துக்கள் இவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற போது அரசாங்கத்தால் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஓவ்வொரு மக்களும் தமது கருத்துகளை இங்கு கூறியிருக்கிறார்கள் இதனால் மல்லாகம் நீதவான் முகாமில் வாழுகின்ற மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பவேண்டும் என்பது எமது விருப்பமும் கூட எத்தனை நாளுக்கு முகாம் வாழ்வில் அகப்பட்டு இருப்பது அவர்களது இருப்பிடங்களை பார்த்தால் கஸ்ரமாக உள்ளது.







 

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons